search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
    X

    வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

    • ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார்
    • டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைைம தாங்கினார்.

    மாணவி வித்யா சரோஜினி வரவேற்று பேசினார். மாணவிகள் அதிதி, தர்ஷனா மற்றும் தனிகா வரவேற்பு நடனம் ஆடினார். மாணவி ஆஷிகா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்றனி சுரேஷ் ஆசிரியர் தின உரையாற்றி ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி யினை நடத்தினார். பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    முடிவில் மாணவன் லிரிஷ் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை மாணவி அத்வைதா மற்றும் மாணவன் பெரிஷ் மத்தியூ தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி டெல்பின் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், அஸ்ரபா, ஷீலா மற்றும் கல்வி ஒருங்கி ணைப்பாளர் முத்துசிவம் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பூங்கொ த்து கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து கூறினர்.

    Next Story
    ×