search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
    X

    பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

    • சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன
    • ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தின விழாக் கொண்டாடப்பட்டது. அதற்குப் பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தினத்தை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, நோக்க வுரை, நடனம், சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன. அதோடு மாணாக்கர்கள், ஆசிரியர்க ளாகவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் போல் வேடம் புனைந்து மழலையர் பிரிவினரும் ஒவ்வொரு வகுப்பிற்கும்சென்று பாடம் நடத்தியது அனைவரும் பாராட்டும்விதமாக இரு ந்தது. குறிப்பாக, ஹை-டெக் வகுப்பறையில் லே ப்டாப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் கற்றதும்- கற்பித்ததும் சிறப்பாக இருந்தது.ஆசிரியர்களை மகிழ்வி ப்பதற்காக மாணா க்கர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதும், ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்புப் போடடிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

    Next Story
    ×