search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் ஆசிரியர் தின விழா
    X

    விழாவின்போது, கல்லூரி முதல்வருக்கு துறை தலைவர்கள் நினைவுப் பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் ஆசிரியர் தின விழா

    • தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆசிரியர் பணி அறப்பணி என்றும் ஆசிரியர்கள் மட்டும்தான் தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.

    மாணவர்களை ஒவ்வொரு நாளும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவர்களின் வளர்ச்சியில் தூண்போன்று நிற்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் காலம் முழுவதும் தனக்காக இல்லாமல் மாணவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றனர் என்றார்.

    நுண்ணுயிரியல் துறைத்தலைவர் யுவராஜ் பேசும்போது,சமூகம் சீர்பட ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஆசிரியர்கள் துணை நின்றிருப்பார்கள். மாணவர்கள், ஆசிரியர்களாக உருவாக முன்வர வேண்டும்என்றார்.

    தமிழ்த்துறைத் தலைவர் லட்சுமி,மனதில் நின்ற ஆசிரியர் என்ற தலைப்பில் பேசுகையில், மாணவர்கள், ராதாகிருஷ்ணன், அம்பேத்கார், அப்துல்கலாம். அரிஸ்டாட்டில் போன்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவக்குமார் விழாவில் பேசினார். மாணவர் பவானிராஜ் ஆசிரியப்பணிகள் குறித்து கவிதை வாசித்தார். மாணவி சவுமதி இக்கால ஆசிரியர்கள், அக்கால ஆசிரியர்கள் எனும் தலைப்பில் உரையாடினார். மேலும், திரிஷா என்ற மாணவி, ஆசிரிய சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்.

    முடிவில் பேராசிரியர் திலிப்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×