search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி மது விற்ற"

    • மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.

    அப்போது சின்னம்மா புரம், கெட்டிசெவியூர்-நம்பியூர் ரோடு, வெள்ளப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்கால் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஈரோடு புஞ்சை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் பெரியசாமி (வயது 53), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (32), நம்பியூர் சூரியம்பாளையம் பழனி மகன் நாகராஜன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் காஞ்சி கோவில்-பெருந்துறை ரோடு, இச்சிபாளையம் வாய்யக்கால் கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை முள்ளம்பட்டி அடுத்த கண்ணவேலம் பாளைய த்தை சேர்ந்த மூர்த்தி (50), கொடுமுடி விருப்பம்பா ளையம் ராமகி ருஷ்ணன் மகன் சீனிவாசன் (28) ஆகி யோர் மீது காஞ்சி கோவில், கொடுமுடி போலீ சார் வழ க்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்தி ற்காக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சின்ன ப்பன் மகன் முருகன் (41) என்பவரை மலையம்பாளையம் போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
    • ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழு வதும் சட்ட விரோதம் மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் இந்த உத்தரவை மீறி மது விற்பனை நடைபெறுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் தீவிர சோதனையில் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.
    • போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


    • 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருந்துறை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் பருத்தி கண்மாய் பகுதியை சேர்ந்தவர் பஞ்சு மகன் ராஜ்குமார் (வயது 42), கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மகன் ஸ்ரீதர் (32),

    பவானி ஈஸ்வரன் கோவில் பகுதி யைச் சேர்ந்த சின்னப்பி ள்ளை என்ற ருக்மணி (70), பங்களாபுதூர் கொங்க ர்பாளையத்தை சேர்ந்த பொன்னக்கால் (60), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (32), நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் காளிமுத்து (29), கடையா ம்பாளையம் முருகன் மனைவி செல்வி (50), கணக்கம்பாளையம் பாரதி தெரு ஆபிரகாம் (50), பவானிசாகர் தொப்பம்பாளையம் அனுமந்தன் மகன் மாரப்பன் என்ற மாறன் (40) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் இடையா ம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அரு ந்திய குற்றத்திற்காக கட த்தூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சந்தோஷ்கு மார் (27) என்ப வர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சென்னி மலை, தாளவாடி,பவானி சாகர், கவுந்தப்பாடி ஆகிய பகுதி களில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த செல்வம் மகள் சிவகாமி (வயது 42), சூரம்பட்டி காமராஜ் தெரு வை சேர்ந்த பழனிசாமி மகன் தினேஷ் குமார் (37),

    சென்னிமலை ராசம்பாளையத்தை சேர்ந்த ராம சாமி மகன் பூபதி (41), தாள வாடியை சேர்ந்த மாதேஷ் (48), அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வம் (60),

    கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த சின்னியப்பன் என்ற தங்கராஜ் மகன் கேசவமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை மேட்டுப்புதுரை சேர்ந்த சுரேஷ் (வயது 38), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பைரவன் (49), மதுரை மாவட்டம் ஆண்டி ப்பட்டி சேர்ந்த சுரேஷ்பவன் (42),

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஹரி கிரு ஷ்ணன் (32), கோவை மாவ ட்டம் ராஜீவ் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (45), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த குப்புசாமி (48), சூலூர் பகுதியை சேர்ந்த பரமசிவன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானி, கோபி பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த தங்கவேல் (வயது 60), பவானி வரதநல்லூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), கோபி மல்லிபாளையத்தை சேர்ந்த காந்தி வேல் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு கிறதா? என்பதை கண்காணி க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இ.வி.கே. சம்பத் சாலை, மூலப்பட்டறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (45) என்பதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிட மிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சூரம்பட்டி மலைய ம்பாளையம், சிறுவலூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடு முடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளிதிருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல் கோபி, அந்தியூர் என்ன மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

    இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×