search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள்ஆய்வு"

    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 5 கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்த உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கிருந்த 195 கிலோ கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
    • கெட்டுபோன மீன்களை விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா தளத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து அருவிகளை பார்த்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும் பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததும் அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.

    இந்நிலையில் மீண்டும் நேற்று மாவட்ட கலெக்டரின் சாந்தி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா அறிவுறுத்தலின் பேரில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து திடீர் ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து மீன்கள் மீது பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் 5 கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்கள் அழிக்கப்பட்டன. மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
    • யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது

    உடுமலை :

    தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தர்மபுரி மாவட்டத்தில் 3 யானை களும், அடுத்து ஒரு யானையும் பலியானது.கடந்த வாரம் கோவை பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஒரு யானை பலியானது.இதனையடுத்து, மின்சாரம் தாக்கி வன விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில் வன எல்லை கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலி, முறை கேடாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள், தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பிகள், மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்யவும், உரியநடவடிக்கை எடுக்கவும் வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர்.மேலும் வன எல்லைகள் மற்றும் வன விலங்குகள் நடமா ட்டம்உள்ள பகுதிகளில், மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமின் கம்பங்கள், கம்பிகள் உள்ளி ட்டகட்டமை ப்புகளை பாதுகாப்பான முறையில் மாற்றி அமை க்கவும் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களின் எல்லை ப்பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.இதன் அருகிலுள்ள கிராம ங்களிலும், வன உயிரினங்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பு கள் தாழ்வாக அமைக்க ப்பட்டுள்ளதா என்றும், சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம்பாய்ச்ச ப்படுகிறதா என்பதையும் மின் வாரிய பணியாளர்கள் மற்றும்வனப்பணி யாளர்கள்இணைந்து தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது.உடுமலை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை பகுதிகளில், ஆனைமலை புலிகள் காப்பகம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் மின் வாரியம், வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா, சோலார் மின் வேலிகளில் முறைகேடாக திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணை ப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்ப ட்டிருந்தாலோ வனத்து றையினருக்கு தகவல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது.உடுமலை வனச்சரகம் 94879 87173, 75022 89850,94866 59701, 94877 87731 ஆகிய எண்களிலும், அமராவதி வனச்சரகம் 90470 66460, 94865 87797 ஆகிய எண்களிலும், கொழுமம் வனச்சரகம் 80729 81528, 87787 25381 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வனத்தின் ஆதாரமாக உள்ள வன விலங்குகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என வனத்து றையினர் தெரிவித்தனர்.

    • மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது
    • சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்த ப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் தாழ்வான மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வன எல்லைப் பகுதிகள், விளை நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படு கிறதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சீரநாயக்கன்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட மலையடிவார பகுதிகளில் உள்ள யானை வழித்தடங்களில் பழுதான மின்கம்ப ங்களை மாற்றுவதற்கும் மற்றும் தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    இதில் வள்ளியம்மன் கோவில் வீதி, கணபதி நகர், தி.ரு.வி.க காலனி, மருத மலை அடிவார பகுதிகள், சாடிவயல், பூண்டி, வடிவே லம்பாளையம், தொப்பிலி பாளையம், பெருமாள் கோவில் வீதி, சென்னனூர், கரடிமடை, மத்திபாளையம், தீத்திபாள ையம்பஞ்சாயத்து, அய்யாசாமி கோவில் சுற்று வட்டார பகுதி, ராமசெட்டி பாளையம், ஜெகநாதன் நகர், கே.பி.எஸ் காலனி, குப்பேபாளையம், வளைய ம்பாளையம், காளியம்பா ளையம், நரசீபுரம் மற்றும் கீரின் ஹோம் ஆகிய பகுதிகளில் நடந்தது.

    மேலும் பேரூர் வட்டத்துக்குட்பட்ட கலிக்கநாயகன்பாளையம் கிராமம், ஓணாப்பாளை யம், கிரீன் ஹோம் உள்ளிட்ட வனப் பகுதிக்கு ட்பட்ட யானை வழித் தடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வ ழுத்த மின்பாதைகள், மின்பாதைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறை, வனத்து றையினர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்துக் கொண்டனர்.

    அப்போது தாழ்வாக செல்லும் மின் இணைப்பு களால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன் படுத்துமாறும் அப்பகுதி மக்களிடம் வலியுறுத்த ப்பட்டது. வன எல்லை ப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ,

    சட்டத்து க்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்பட 58 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
    • விதிமுறையை மீறி செயல்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அரியலூர்

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதிகள் சட்டத்தின் கீழ் பெரம்பலூர் மற்றும் அரியலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அலுவலர்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்பட 58 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    இதில் 12 கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டவிதிகளை பின்பற்றாமல், முரண்பாட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமுறையை மீறி செயல்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    எடையளவு சட்டமுறையை கடைவியாபாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பொட்டலமிடுபவர்கள் உரிமம் பெறாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. விதிமுறையை மீறும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×