search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பு- யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரிகள் ஆய்வு
    X

    மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பு- யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரிகள் ஆய்வு

    • மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது
    • சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்த ப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் தாழ்வான மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வன எல்லைப் பகுதிகள், விளை நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படு கிறதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சீரநாயக்கன்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட மலையடிவார பகுதிகளில் உள்ள யானை வழித்தடங்களில் பழுதான மின்கம்ப ங்களை மாற்றுவதற்கும் மற்றும் தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    இதில் வள்ளியம்மன் கோவில் வீதி, கணபதி நகர், தி.ரு.வி.க காலனி, மருத மலை அடிவார பகுதிகள், சாடிவயல், பூண்டி, வடிவே லம்பாளையம், தொப்பிலி பாளையம், பெருமாள் கோவில் வீதி, சென்னனூர், கரடிமடை, மத்திபாளையம், தீத்திபாள ையம்பஞ்சாயத்து, அய்யாசாமி கோவில் சுற்று வட்டார பகுதி, ராமசெட்டி பாளையம், ஜெகநாதன் நகர், கே.பி.எஸ் காலனி, குப்பேபாளையம், வளைய ம்பாளையம், காளியம்பா ளையம், நரசீபுரம் மற்றும் கீரின் ஹோம் ஆகிய பகுதிகளில் நடந்தது.

    மேலும் பேரூர் வட்டத்துக்குட்பட்ட கலிக்கநாயகன்பாளையம் கிராமம், ஓணாப்பாளை யம், கிரீன் ஹோம் உள்ளிட்ட வனப் பகுதிக்கு ட்பட்ட யானை வழித் தடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வ ழுத்த மின்பாதைகள், மின்பாதைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறை, வனத்து றையினர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்துக் கொண்டனர்.

    அப்போது தாழ்வாக செல்லும் மின் இணைப்பு களால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன் படுத்துமாறும் அப்பகுதி மக்களிடம் வலியுறுத்த ப்பட்டது. வன எல்லை ப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ,

    சட்டத்து க்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×