search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள் உயிரிழப்பை தடுக்க உடுமலை வனப்பகுதியில்  அதிகாரிகள் அதிரடி ஆய்வு
    X
    கோப்புபடம்

    யானைகள் உயிரிழப்பை தடுக்க உடுமலை வனப்பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    • தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
    • யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது

    உடுமலை :

    தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தர்மபுரி மாவட்டத்தில் 3 யானை களும், அடுத்து ஒரு யானையும் பலியானது.கடந்த வாரம் கோவை பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஒரு யானை பலியானது.இதனையடுத்து, மின்சாரம் தாக்கி வன விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில் வன எல்லை கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலி, முறை கேடாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள், தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பிகள், மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்யவும், உரியநடவடிக்கை எடுக்கவும் வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர்.மேலும் வன எல்லைகள் மற்றும் வன விலங்குகள் நடமா ட்டம்உள்ள பகுதிகளில், மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமின் கம்பங்கள், கம்பிகள் உள்ளி ட்டகட்டமை ப்புகளை பாதுகாப்பான முறையில் மாற்றி அமை க்கவும் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களின் எல்லை ப்பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.இதன் அருகிலுள்ள கிராம ங்களிலும், வன உயிரினங்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பு கள் தாழ்வாக அமைக்க ப்பட்டுள்ளதா என்றும், சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம்பாய்ச்ச ப்படுகிறதா என்பதையும் மின் வாரிய பணியாளர்கள் மற்றும்வனப்பணி யாளர்கள்இணைந்து தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது.உடுமலை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை பகுதிகளில், ஆனைமலை புலிகள் காப்பகம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் மின் வாரியம், வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா, சோலார் மின் வேலிகளில் முறைகேடாக திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணை ப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்ப ட்டிருந்தாலோ வனத்து றையினருக்கு தகவல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது.உடுமலை வனச்சரகம் 94879 87173, 75022 89850,94866 59701, 94877 87731 ஆகிய எண்களிலும், அமராவதி வனச்சரகம் 90470 66460, 94865 87797 ஆகிய எண்களிலும், கொழுமம் வனச்சரகம் 80729 81528, 87787 25381 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வனத்தின் ஆதாரமாக உள்ள வன விலங்குகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என வனத்து றையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×