search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் ஆலோசனை"

    • டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

    ஆனால் கர்நாடகா அரசு போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீரை முழுமையாக திறந்து விட மறுத்து வருகிறது.

    கடந்த 9-ந்தேதி வரை 37.9 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் கர்நாடகா வழங்கியது.

    அதனால் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்து விடுமாறு கூறியதின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டது. ஆனால் இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் அளவை கர்நாடகம் குறைத்து விட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநில கருத்தையும் கேட்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.

    குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கேட்டும் முறைப்படி கர்நாடகா தண்ணீர் தராததால் நெற்பயிர்கள் கருகுவதை சுட்டிக்காட்டும் தமிழகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

    இதே போல கர்நாடகா அரசின் சார்பில் அவர்களும் தங்களது கருத்தை வலியுறுத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனே பரிந்துரைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
    • 26 ஆயிரத்து 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, அரசு நியமித்த சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை யில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 213 மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 25 ஆயிரத்து, 664 மாணவர், 496 தனித்தேர்வர் உட்பட, 26 ஆயிரத்து, 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவது, அதற்காக பணிகள், முதன்மை, துறை கண்காணிப்பாளருக்கான ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று நடந்தது.

    இதில் பொதுத்தேர்வு க்கான சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கஜலட்சுமி தலைமையில் மாவட்ட தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொது த்தேர்வை எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலம் ஹால்டிக்கெட் வழங்க ப்பட்டது.

    • மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 26-ந்தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு நடைபெறுவது வழக்கம்.

    இப்போது மெட்ரோ ரெயில் பணிகளுக்காக அந்த பகுதியில் வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் குடியரசு தின விழாவை மெரினா கடற்கரை சாலையில் எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

    இதற்காக காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம், அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடம் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த பாதுகாப்பான இடம் என்பதை இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

    • நாமகிரிப்பேட்டையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செய்ய பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் திட்ட உதவி பொறியாளர் ஆகியோருடன் பேரூராட்சி தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

    ஆய்வுக் கூட்டத்தில் பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை உயர்த்தி வழங்க கோரியும், குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ×