search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth kidnapping"

    • திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 29 )
    • நாகூர் மீரான் தனது சகோதரியுடன் பேசி கொண்டு இருந்த போது 4 பேர் அவரை கடத்தி சென்றனர்.

    திருச்சி,

    திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் சம்பவத்தன்று இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திருச்சி பட்டவர்த்ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல், விருமாண்டி, அரசு, டேஞ்சர் பாலா ஆகிய 4 பேரும் நாகூர் மீரானை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ் நிசா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிந்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் போல நடித்து ரூ.97 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.

    இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

    கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று பஸ்சை வழி மறித்தது. பின்னர், பஸ்சில் ஏறிய வாலிபர்கள் சிலர், கோபிநாத்திடம் சென்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் விசாரணைக்கு வருமாறு அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி காரில் கடத்தினர்.

    பின்னர் கீழ்ப்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி கார் சீறிப்பாய்ந்தது. வண்டலூர் அருகில் வைத்து கோபிநாத்திடம் இருந்த ரூ.97 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.

    இதுபற்றி கோபிநாத் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபிநாத்தை காரில் கடத்திச் சென்ற கும்பல் அடையாளம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    காட்பாடியில் வாலிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் ரமேஷ். வேலூரில் உள்ள லாரி சர்வீஸ் சென்டரில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் டிஜோ ரமேஷ் (வயது 29). ஊட்டியில் விசுவல் கம்யூனிகே‌ஷன் படித்து முடித்தார்.

    வீட்டில் இருந்தபடி வேலை தேடி வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் டிஜோ ரமேசை தூக்கி காரில் உள்ளே போட்டு கடத்தி சென்றனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதற்குள் கார் வேலூர் நோக்கி வேகமாக சென்று விட்டது. டிஜோ ரமேஷின் பெற்றோர் பதறியபடி விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். டிஜோ ரமேஷின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே வாலிபர் டிஜோ ரமேஷ் மற்றொரு செல்போனில் இருந்து அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது என்னை தேட வேண்டாம் எனக் கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    அந்த செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கடத்தல் கும்பல் வேலூர் கொணவட்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொணவட்டத்தில் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் தெரு தெருவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சதுப்பேரி ஏரிக்கரை பகுதியிலும் தேடுதல் வேட்டை நடந்தது.

    அதிகாலையில் கடத்தல் கும்பல் கருகம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்ததை செல்போன் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

    அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை காட்பாடி, விருதம்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை எதற்காக யார் கடத்தி சென்றார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

    வாலிபர் கடத்தல் சம்பவத்தில் காட்பாடி, விருதம்பட்டு ரவுடி கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து ரவுடி கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×