search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் பட்டப் பகலில் வாலிபர் கடத்தல்
    X

    திருச்சியில் பட்டப் பகலில் வாலிபர் கடத்தல்

    • திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 29 )
    • நாகூர் மீரான் தனது சகோதரியுடன் பேசி கொண்டு இருந்த போது 4 பேர் அவரை கடத்தி சென்றனர்.

    திருச்சி,

    திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் சம்பவத்தன்று இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திருச்சி பட்டவர்த்ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல், விருமாண்டி, அரசு, டேஞ்சர் பாலா ஆகிய 4 பேரும் நாகூர் மீரானை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ் நிசா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிந்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×