search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WATER AND DRAINAGE BOARD"

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • 5 நாட்கள் நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் திட்டக் கோட்டம் வேலூர் மாவட்டம் மூலமாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை முகாம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் 50 ஊராட்சிகளை சேர்ந்த 250 பேருக்கு 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது இந்த பயிற்சி முகாமில் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் முறைகள் மற்றும் களநீர் பரிசோதனை பயன்கள், கையாளும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நுண்ணுயிர் பரிசோதனைக்கு நீர் சேகரிக்கும் முறை உள்ளிட்ட வை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் குமரவேல் மற்றும் சேவ் அறக்கட்டளை உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனைக்கான பயிற்சி கையேடுகளை ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் வழங்கினார்.நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது,
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அரசு சுகாதாரத் துறையைப் போன்று சேவை மனப்பான்மையுடன் லாப, நஷ்டம் பாராது மக்களின் நலன், மேம்பாடு என்ற வகையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

    திருச்சி,

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. மாநிலததலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் செளந்தர்ராஜ், மாநில பொதுச்செயலாளர் ராசகுமார், பொருளாளர் ஜோதி வீரபாண்டியன், மாநில துணைத்தலைவர் ஸ்ரீதரன், இணைச்செயலாளர்கள் நடராஜன், அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் கேத்தரின் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அரசு சுகாதாரத் துறையைப் போன்று சேவை மனப்பான்மையுடன் லாப, நஷ்டம் பாராது மக்களின் நலன், மேம்பாடு என்ற வகையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த வாரியத்தை வர்த்தக ரீதியான நிறுவனமாக பாராது குடிநீர் வழங்கல் துறையாகக் கருதி அரசின் சலுகைகள் வழங்கப்பட வேண்டுகிறோம்.

    அவ்வாறு கருதாத பட்சத்தில், மின்சார வாரியத்திற்கு வழங்குதலைப் போன்று குறைந்த பட்சம் ரூ.5000 கோடியையாவது மானியமாக வழங்க வேண்டுகிறோம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீருக்கு உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர்க் கட்டணத்தை சரிவர செலுத்தாத காரணத்தால் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. வாரியச் சட்டபடி திட்டத்திற்கான செலவினத் தொகையை அமைப்புகள் செலுத்த வேண்டும்.

    அவ்வாறு செலவினத் தொகையை செலுத்தாத நிலையில் அரசே அத்தொகையைச் செலுத்தி விட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். இத்தகைய வாரிய சட்டம் குடிநீர்க் கட்டணம் வசூலிக்க செலுத்தாத உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.

    எனவே, இவ்வாரியச் சட்டத்தை உரிய வகையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசையும், வாரியத்தையும் கேட்டுக்கொள்கிறோம். அரசு வெளியிடும் பணியாளர், ஓய்வூதியர் சம்பந்தமான அனைத்து அரசு ஆணைகளையும் காலதாமதமின்றி உடனே வாரியத்தில் நடைமுறைப்படுத்தபட வேண்டும். மேற்கண்டவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் மாநில துணைத்தலைவர் எஸ்.பி.கருணாகரன் நன்றி கூறினார்.

    ×