என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Festival"

    • நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம்.
    • இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செம்பொழில் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது.

    நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த கிராமத்து திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உள்ளே இடம்பெற்றுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். இன்று தொடங்கிய இந்த கிராமத்து திருவிழா வரும் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண்முன் காட்சிப்படுத்தும் விதமாக 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்விற்கு இன்று மற்றும் நாளை நுழைவுக் கட்டணமாக ரூ.50, 23 மற்றும் 24-ந்தேதிகளில் ரூ. 150 வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம், எந்திரத்தனமான வாழ்க்கையில் பழைய விஷயங்களை நாம் மறந்து கொண்டிருக்கும் பொழுது அதை நினைவுபடுத்தும் விதமாகவும் சிக்னலில் கூட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் முதலமைச்சர் கீழடி மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தி நம் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். நாம் யார் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாப்பாபட்டியில் கிராமியத்திருவிழா நடந்தது.
    • தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

     உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாப்பட்டி கிராமத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில் கிராமிய திருவிழா நடந்தது.

    தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 95 சுய உதவி குழுக்களுக்கு ரூ.4.87 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டன. 75 பேருக்கு கறவை மாடுகள் வாங்க கடனாக தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.90 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விவசாய முதலீடு சார்ந்த தவணைக்கடன் ரூ.1.36 கோடி வழங்கப்பட்டது .

    மேலும் பாப்பாப்பட்டி கிராம மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களின் உபயோகத்திற்கென 5 கணினிகள் வழங்கப்பட்டன. கிராம மக்களின் பயன்பாட்டுக்காக ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொருத்தப்பட்டது.

    ஏறத்தாழ 20 சுற்று வட்டார கிராமங்கள் பயன்பெறு வகையில் தானியங்கி பணமெடுக்கும் எந்திரம் (ஏ.டி.எம்.) நிறுவப்பட்டது. பாரம்பரியக்கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கரகாட்டம், சிலம்பம் மற்றும் பறை நிகழ்ச்சிகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் மோகனபிரபு, பாப்பாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வாலாந்தூ ர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, வாலாந்தூர் எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் சின்ன பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×