search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal"

    • மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
    • கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.

    பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். #PeriyarStaue #DMK
    சென்னை:

    பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    காலை 9 மணி அளவில் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் திரண்டு நின்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது காலணிகளை வீசினார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

    அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த அரசியல் கட்சியினர் சிலர் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். இதனை பார்த்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை கூட்டத்துக்குள் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு முயன்றனர். ஆனால் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை.

    பின்னர் ஒருவழியாக கூட்டத்தினரின் பிடியில் இருந்து வாலிபரை வெளியில் கொண்டு வந்து போலீசார் அவரை பாதுகாப்பாக போலீஸ் வேனில் ஏற்றினர்.

    இருப்பினும் கார் கண்ணாடி வழியாக கையை விட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் காரை வெளியில் கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

    சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னரே போலீசாரால் கூட்டத்துக்குள் இருந்து காரை வெளியில் எடுக்க முடிந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றது.


    இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அவரது தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோ‌ஷங்களை திருமாவளவன் எழுப்பினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதற்கிடையே பெரியார் சிலை மீது காலணியை வீசிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் ஜெகதீஸ். ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் மகேஸ் குமார் அகர்வால் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 
    #PeriyarStaue
    ×