என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "venkat prabu"
- விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன்.
- கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம்.
"பெரும் பொருட்செலவில் 'அந்தகன்' படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்" என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இன்னைக்கு ஜாலியாக நெல்லை பார்க்க வந்தேன், வந்த இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிளம்புகிறேன். ஹெல்மெட் ஒரு லைஃப் ஜாக்கெட் என்கிறார்கள். இது லைஃப் ஜாக்கெட் மட்டுமல்ல, குடும்ப கோட். சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதனால்தான் இந்த ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எனது ஆதரவாளர்கள் சார்பாக நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன். இரண்டு மூன்று புதிய அழைப்புகள் வந்தன. விரைவில், நானும் இந்த பகுதியில் ஏதாவது செய்வேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும் என்று கூறினார்.
கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை ஏன்னு தெரிவித்துள்ளார்.
- 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
- சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
- நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இதைத்தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
வெங்கட் பிரபு -விஜய்
இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் இதே கதைக்களத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்