search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veal buying program"

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமணம் உள் ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணி, மாலை 5.30 மணி என இருவேளைகளிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    மேலும் உற்சவர் சுப்பி ரமணிய சுவாமி தெய்வா னையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை மாலை 6.30 மணி அளவில் கோவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னி லையில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை மறுதினம் 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    • கந்த சஷ்டி விழா வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின்5-ம் நாளான இன்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடக்கிறது.

    கந்த சஷ்டி விழா 

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாயொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை நடக்கிறது. விழாவில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் சூரனை அழிக்க அம்மனிடம் சக்திவேலை சுப்பிரமணிய சுவாமி பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (30-ந் தேதி) மாலை 6 மணியளவில் திருப்பரங்கு ன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி, வீரபாகு தேவருடன் சூரனை அழிக்கும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹாரத்தை கண்டு மகிழ்வார்கள்.

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி காலையில் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெறும். திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு தினமான சித்திரை 1-ந் தேதியும், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளிலும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றுவது வழக்கம்.

    அதுபோல் தற்போது கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில் வருகிற 31-ந் தேதி மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×