search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றத்தில்  இன்று மாலை வேல்வாங்கும் நிகழ்ச்சி
    X

    திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை வேல்வாங்கும் நிகழ்ச்சி

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமணம் உள் ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணி, மாலை 5.30 மணி என இருவேளைகளிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    மேலும் உற்சவர் சுப்பி ரமணிய சுவாமி தெய்வா னையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை மாலை 6.30 மணி அளவில் கோவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னி லையில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை மறுதினம் 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    Next Story
    ×