search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union minsiter"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ நவீன வசதிகள் இந்தப் பூங்காவில் இடம் பெற்றிருக்கும்.
    • மாற்று திறனாளி பூங்கா அமைக்க மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உதவி.

    நாக்பூர்:

    மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர் பல்வேறு உதவி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, சமூகத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும், கடைக் கோடியில் இருப்பவர்களும் அரசின் திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்வதும் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்காவை நாக்பூரில் உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சகம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்த பூங்காவில் உணர்திறன் தோட்டம், நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×