search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Finance Minister"

    • மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் முன் உதாரணமாக எப்போதும் திகழ வேண்டும். கடந்த 4 மாதங்களில் 4 ஆயிரம் பயனாளிகள் மத்திய அரசு திட்டங்களில் புதுச்சேரி அரசு சேர்த்துள்ளது. விடுப்பட்ட பயனாளிகளையும் இத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

    அடுத்த ஓராண்டிற்குள் மத்திய அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். புதுச்சேரியில் பழங்குடியினர் குறைவாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

    அவர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து பயனடைய செய்ய வேண்டும்.

    புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும். புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சகத்திடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது
    • கடன் தொகையை வசூலிக்கும் இந்த நடவடிக்கைகள் தொடரும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது:

    நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எனினும், கடன் பெற்றவர்கள் இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பில் தொடர்ந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் இந்த நடவடிக்கைகள் தொடரும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த வாரா கடன்கள் திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடன்களின் வரிசையிலேயே வகைப்படுத்தப்படும். அவற்றை திருப்பி வசூலிக்கும் முயற்சியில் தொடர்புடைய வங்கிகள், வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.

    இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் பொது துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடியை மீட்டெடுத்து உள்ளன. அவற்றில், வர்த்தக வங்கிகளின் கணக்கில் இருந்து இருப்பு நிலை அறிக்கைக்காக நீக்கப்பட்ட ரூ.1,03,045 கோடி கடன்களும் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார். 

    • இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
    • பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இது கட்டப்படுகிறது.

    சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பணிகளை தொடங்கி வைத்தார்.


    நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நடவடிக்கையாக, இந்த பழமையான கட்டிடத்தின் கட்டிடக்கலையில் தேவையான மாற்றங்களைச் செய்து, பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பணியாற்றும் அதிகாரிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணியையும் சுங்கத்துறை மேற்கொண்டுள்ளது.

    இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். மொத்தக் கட்டுமானப் பணிகளும் பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நடைபெறுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க முடியும். அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் இந்தப் புதிய அலுவலகம், வரும் காலங்களில் அனைத்து சுங்கத்துறை தொடர்பான கட்டிட திட்டங்களுக்கும் முன்மாதிரியாக திகழும். சுங்கத்துறை மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும்.
    • 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது.

    மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தினக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: 


    வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற அமலாக்கத்துறை ஏஜென்சிகளுக்கு அவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர். இது பாராட்டுக்கு உரியது.  இந்தியாவில் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்படுவதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

    75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்ட அமிர்தப் பெருவிழா காலத்தில், நாடு முழுவதும் 14 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டிருக்கிறது. இது வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகத்தின் வல்லமையை பறைசாற்றுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில், மூளையாக செயல்படுவோரையும், நிதியுதவி அளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பம், தர ஆய்வுகளை பயன்படுத்தி தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். சமூக விரோத சக்திகள் தகவல்களைத் திருடுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து செல்வது பெருமைக்குரிய விஷயம்.
    • நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை.

    தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது. இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: 


    பொதுவாழ்வில் இருக்கும்போது நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. அதுபோன்ற எண்ணத்தில் தற்போது வரையில் நான் செயல்பட்டதும் இல்லை. குறிப்பாக, தென் தமிழ்நாடு மழை இல்லை என்றால் கடும் வறட்சியான பகுதியாக இருக்கும்.

    அங்குள்ள மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். அப்பகுதியில் உள்ள முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோல சிறுதொழிலை தொடங்கினார்கள். தம்மோடு தொழில் வாய்ப்புகள் முடிந்துவிடாமல் எதிர்கால தலைமுறைகளும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில் பயிற்சி பெற்று தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற தீப்பெட்டி தொழிற்சாலைகளை நிறுவி அந்த பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வைத்துள்ளனர்.

    அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தீப்பெட்டி உற்பத்தியில் உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்வது சிவகாசிதான். தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம்.

    விவசாயம் செழிக்காத பூமியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகள். விரைவில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
    • இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

    டெல்லி:

    அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    தற்போதைய உலகப் பொருளாதார வளர்ச்சி நிலை சவாலானதாகவே உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் முக்கிய அங்கமாக வெளிநாட்டு மூலதனத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

    இதற்காக முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். வெளிநாட்டு முதலீட்டாளருக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மொத்த வெளிநாட்டு முதலீட்டு வரம்பு அதிகரிப்பு, பொதுவான விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் வெற்றி, இந்தியாவில் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

    உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, அண்மையில் இங்கிலாந்தை தாண்டி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் உலகின் பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரியங்கா காந்தியை வரவேற்க காத்திருந்தவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
    • பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக தகவல்.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில் காங்கிரஸ் மகளிர் அணியினர் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காரில் சென்றார். அவரை கண்ட காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கை அசைத்தனர். இதை கண்ட நிதி மந்திரி, காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதை சமூக வளைதளங்களில் அவர்கள் பகிர்ந்தனர். நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக இமாச்சல் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய நிதி மந்திரியை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதிவாசிகள் நலம் விசாரித்தனர்.
    • காய்கறி சந்தையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்.

    மயிலாப்பூர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா மற்றும் மெதுவாகக் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இல்லத்தை, அவர் திறந்து வைத்தார்.


    பின்னர் சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற அவர், பொதுமக்களுடன் இணைந்து அங்குள்ள தெரு ஓர கடை ஒன்றில் காய்கறி வாங்கினார். காய்கறி விற்பனையாளர் அவருக்கு அங்கிருந்த காய்கறிகள் குறித்து விளக்கினார். 

    மத்திய நிதி மந்திரியை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதிவாசிகள் நலம் விசாரித்தனர். அவர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர் காய்கறி சந்தையில் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாக வைரலானது.

    • அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை.
    • இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:

    மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறேன்.

    பணவீக்கத்தை 4 சதவீதத்துக்கு கீழ் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்க பிரச்சினையில் உலக சூழல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா அனுபவித்து வருகிறது. ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத உயர் பணவீக்கத்தை எதிர் கொள்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.
    • பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி.

    சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜி.எஸ்.டி. புதிய வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இந்த வரியால் அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை (தரத்துக்கு ஏற்ப) விலை உயர்ந்தது. கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.1,050-க்கு விற்பனை ஆனது.

    அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்களும், அரிசி வியாபாரிகளும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. பொருந்தும் என பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில்லறை விற்பனையில் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்றும், பாக்கெட்டுகளில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி குறிப்பிட்டுள்ளார்.

    லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    • 48 வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
    • தமிழகத்தின் கோரிக்கை ஏற்று மத்திய நிதி மந்திரி ஒப்புதல்.

    47வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் 2 நாள் ஆலோசனை கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    அப்போது தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்கள் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகளை அதிகரித்தல் துணை புரியும்
    • நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை பிரிக்ஸ் அமைப்பு தெரிவிக்க வேண்டும்

    சீனா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பு அறிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், அனுபவங்கள் குறித்து உரையாடுதல், பரிமாறிக்கொள்ளுதல், நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை தெரிவித்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும் முதலீடுகளை அதிகரித்தலும் தொடர்ந்து துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.

    ×