என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "trivikram"
- இந்த வெற்றி கூட்டணி நாங்காம் முறை ஒன்றாக இணைந்து பணியாற்ற போகிறார்கள்.
- தெலுங்கு சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ப்ளாக்-பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் டீசர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகியது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த டீசரை வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் அடுத்த படமாக இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அல்லு அர்ஜூன் நடித்த ஜுலாயி, S/O சத்யமூர்த்தி , அல வைகுந்தபுரமுலோ என மூன்று படங்களையும் திரி விக்ரம் இயக்கியுள்ளார். இந்த வெற்றி கூட்டணி நாங்காம் முறை ஒன்றாக இணைந்து பணியாற்ற போகிறார்கள். இதனால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பாப்பு உண்டாகியுள்ளது. அல்லு அர்ஜூன் பிறந்தாளை முன்னிட்டு படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
'நுவெ நுவே' படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ், தெலுங்கு சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ப்ளாக்-பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தினார்.
- இந்த படத்தின் இயக்குனர் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் "தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர்சூட்டியிருப்பதாக அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பில், தற்போது நடித்து வரும் கோட் படம் தவிர்த்து, மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தி இருந்தார்.
மேலும், இந்த படத்தின் பணிகளில் அரசியல் கட்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். எனினும், இந்த படத்தின் இயக்குனர் பற்றி எவ்வித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக விஜய் நடிக்கும் 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின.
இதோடு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கிய வினோத் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து விஜய்யின் 69 படத்தை வெற்றி மாறன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், விஜய் 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் புதிய பெயர் இணைந்துள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களை இயக்கிய த்ரிவிக்ரம் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’.
- இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது.
இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டூர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி.
முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்