search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Travellers"

    • 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும்.
    • ஏழை பயணிகளின் நலனை கருதி இலவச கழிவறை கட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் 37-வது ஆண்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக பேரவை துணைத்தலைவர் பழனி வேலு அனை வரையும் வரவேற்றார்.

    சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் கோ.அன்பரசன், இணை செய லாளர் குருநாதன், பேரவை நிறுவனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து, விளை யாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரத் கல்விக்குழும நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி ஆஸ்ப த்திரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் திருமலை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்தர்தாஸ், துரைராஜன், அறிவழகன், அரிமா செல்வராசு, ஞானசேகர், தங்கவேலு, கோபாலகிருட்டிணன், அய்யனார், செண்பக லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்,

    தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தனி புற நோயாளிகள் பகுதியும், தனி உள் நோயாளிகள் பிரிவும் ஏற்படுத்த வேண்டும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. ஏழை பயணிகளின் நலன் கருதி இலவச கழிவறை கட்டுவதுடன் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      சேலம்:

      சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா விற்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

      ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் காவிரியில் ஆனந்தமாக நீராடி பூங்காவிற்கு சென்று பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர்.

      சுற்றுலா பயணிகள் கார்களிலும், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களி லும் சுற்றுலா தளங்களுக்கு வந்ததால் மேட்டூர், கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

      நேற்று ஒரே நாளில் 7,216 சுற்றுலா பணிகள் மேட்டூர் அணை பூங்கா விற்கு வந்து சேர்ந்தனர். இதன் மூலம் பார்வை யாளர் கட்டணமாக ரூ.36 ஆயிரத்து 80 வசூல் ஆனது. அணையின் வலது கரை யில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 827 பேர் வந்து சென்றனர். 

      • சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.
      • ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

      சேலம்:

      தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

      இதனால் சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து செல்வது போல நின்றன.

      உற்சாகம்

      ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மலர் செடிகளையும் இயற்கையையும் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

      பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், மஞ்ச குட்டை காட்சி முனை, சேர்வராயன் கோவில் உள்பட பல இடங்களுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர்.

      மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சி, மஞ்சக்குட்டை அடுத்த நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களிலும் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.

      ஆனைவாரி முட்டல் ஏரி

      இதேபோல், ஆத்தூர் அடுத்த ஆனைவாரி, முட்டல் சுற்றுலா தலத்திலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருந்தனர். முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.

      கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.

      • தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
      • இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

      சேலம்:

      தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். அணையில் தண்ணீர் 120 அடி எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணையை சுற்றிலும் மலைகள் உள்ளது. இந்த மலைகளை ததும்பியபடி தண்ணீர் காணப்படுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

      இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

      இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

      மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி காணப்படுகிறது.

      ஏற்–காட்–டில் உள்ள படகு இல்–லம், ரோஜா தோட்–டம், லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், சேர்–வ–ரா–யன் மலைக்–கோ–வில், அண்ணா பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை, மேட்டூர் பூங்கா, கொல்லிமலை தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பூக்கள் முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர்.

      சுற்றுலா தலங்களில் தற்போது அவ்–வப்–போது மழை பெய்–து வருவ–தால் குளிர் நில–வி– பசுமை போர்த்தியதுபோல் மேக கூட்டம் மலைகளை சூழ்ந்து காணப்படுகிறது. இத–னால் சுற்–றுலா பய–ணி–கள் சுவர்ட்–டர் அணிந்து சென்–றதை பார்க்க முடிந்–தது.

      சுற்–றுலா பய–ணி–கள் வரத்து அதி–க–ரிப்–பால் கடை–கள், ஓட்–டல்–களில் விற்–பனை படு–ஜோ–ராக நடைபெறுகிறது.

      • ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
      • கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

      ஏற்காடு:

      தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்யவில்லை.

      விடுமுறை தினமான இன்று ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

      • ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
      • இதனால் நெரிசலால் மலை பாதையில் வாகனங்கள் தேக்கம்

      ஏற்காடு:

      ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது.

      இன்று 75-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா , சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட் , படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

      ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இச்சூழலை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

      சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வருவதால் இன்று மலை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகாலையில் இருந்தே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தப்படி சாரை, சாரையாக மலை பாதை வழியாக ஏற்காடுக்கு வந்தபடி இருந்தது. பொதுவாக சேலத்தில் இருந்து 45 நிமிடத்தில் ஏற்காடு வந்துவிடலாம். ஆனால் இன்று வாகன நெரிசலால் மலை பாதை வழியாக ஏற்காடு வர 2, 3 மணி நேரம் வரை ஆனது. இதனால் ஏற்காடு மலை பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

      சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உள்ளூர் கடைக்காரர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      ×