search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு, ஆனைவாரி முட்டலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்த சுற்றுலா பயணிகள். 

    ஏற்காடு, ஆனைவாரி முட்டலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.
    • ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

    இதனால் சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து செல்வது போல நின்றன.

    உற்சாகம்

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மலர் செடிகளையும் இயற்கையையும் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

    பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், மஞ்ச குட்டை காட்சி முனை, சேர்வராயன் கோவில் உள்பட பல இடங்களுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர்.

    மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சி, மஞ்சக்குட்டை அடுத்த நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களிலும் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனைவாரி முட்டல் ஏரி

    இதேபோல், ஆத்தூர் அடுத்த ஆனைவாரி, முட்டல் சுற்றுலா தலத்திலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருந்தனர். முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×