search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvalluvar"

    • முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை தாங்கினார்.

    ஊட்டி

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993ஆம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் ரத்னாவதி பாா்த்தசாரதி திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தனர். சிறுவன் யாழன் திருக்குறள் ஒப்பித்தான். இதில் முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ஆனந்தகுமாா், ஆசிரியா் நல்லகுமாா், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜ், நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா் தங்க அருணா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்கள் நாகநாதன், டெய்ஸி விமலா ராணி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    ×