search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli corporation"

    • அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
    • தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த 20 ஆண்டு காலமாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் டவுன் தாசில்தார் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும், ஒப்பந்த பத்திரத்தில் யாரிடத்திலும் கையெழுத்து வாங்கப்படமாட்டாது என்றும், இதன் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்வது என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் அனைத்து சுய உதவிக்குழு தொழிலாளர்களும் மீண்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணி செய்ய முடியும். அப்போது தான் வேலை வழங்க முடியும் என்று கூறி இன்று முதல் அனைத்து சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கும் வேலை வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி இன்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் முருகன், மோகன் ஆகியோர் தலைமையில் வேலை வழங்க கோரி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்.

    மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் சமீபத்தில் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது.

    அப்போது எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கால்வாயில் இருந்து தூர்வாரிய சாக்கடையை, வயல் தெரு பகுதியில் ரூ. 14 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சிறுவர்கள் பூங்கா பகுதியில் கொட்டி விட்டார்கள்.

    இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் குடிநீரில் சாக்கடை கலந்து ஓடுகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவர் பூங்காவில் சாக்கடை கழிவுகள் கொட்டியதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கத்தின் தலைவர் அயூப் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றாக திகழக்கூடிய ஈரடுக்கு மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் போதிய வெளிச்சம் தராததின் காரணமாக பாலம் இருட்டாகவே காட்சியளிக்கிறது. கம்பீரமாக காட்சியளிக்க வேண்டிய பாலம் பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதில் பயணிக்கின்ற வாகனங்கள் அதிலும் குறிப்பாக 2 சக்கர வாகனங்கள் பாலத்திலுள்ள குண்டு குழிகளை கவனிக்காமல் அதில் விழுந்து நிலை தடுமாறி செல்லும் நிலையும் உள்ளது.

    நல்ல வெளிச்சம் தரும் கூடுதல் வெளிச்சம் கொண்ட விளக்கினை பொருத்திட ஆவண செய்ய வேண்டும். மேலும் பாலத்தில் சில இடங்களில் நீண்ட இடைவெளி விட்டு மின் கம்பங்கள் உள்ளது.

    அதையும் கண்டறிந்து அந்த இடத்திற்கு கூடுதல் மின் கம்பங்களை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதியில் குவியல் குவியலாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். பல குப்பை மேடுகள் சுகாதார சீர்கேடுகளை உருவாக்காமல் இருக்க மூடாக்கு பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் இயற்கை உரம் தயாரிக்கும் உரக்கிடங்குகளும் உள்ளன.

    இங்குள்ள குப்பை மேட்டில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென்று பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் தலைமையில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

    கடும் புகை மூட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.

    இன்று 2-வது நாளாக தொடர்ந்து அந்த பகுதியில் தீ எரிந்து வருகிறது. தொடர்ந்து புகை மூட்டமும் வெளியேறுவதால் வானில் மேக குவியலாக நீண்ட தூரம் புகை பரவி உள்ளது. வீடுகளில் குடியிருப்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். இன்று நெல்லை மாவட்ட தீயணைப்பு துணை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு வருகிறது. பேட்டை, பாளை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து இடை விடாமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

    தீ ஓரளவு கட்டுக்குள் வந்தால் தான், மூடாக்கு பூங்கா, இயற்கை உரம் தயாரிக்கும் பகுதிகள் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். இன்று பிற்பகலிலும் தொடர்ந்து தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnews
    ×