என் மலர்
நீங்கள் தேடியது "tag 99351"
மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.
“இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் சத்குரு ‘நகரங்களின் எதிர்காலம்’ (Future of Cities) என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அப்போது, உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றிற்கு மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு பேசினார்.
மேலும், வளம் இழந்த நிலங்களை மீட்டெடுக்க ‘ஒரு கட்டிட நகரம்’ (One Building City) என்ற தனது யோசனை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து பேசுகையில், “நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதை கட்டுமான துறையினர் பரீசிலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 50 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் மட்டும் 50 முதல் 100 மாடி கட்டிடங்களை கட்டலாம். மீதமுள்ள 49 ஏக்கரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக காடு உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் அங்கு சாகுபடி செய்து கொள்ளலாம்” என கூறினார்.
சில நகரங்களில் மட்டும் அளவுக்கு அதிகமாக செய்யப்படும் பொருளாதார முதலீடுகள் குறித்து பேசுகையில், “உலகில் 72 சதவீத பொருளாதார முதலீடுகள் வெறும் 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம்பெயர செய்யும் காந்தமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமற்றதாகவும் மாறுகிறது. இதற்கு பதிலாக, முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
இம்மாநாட்டில் ஈக்வடார் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹெலனா கவுலிங்கா, இந்திய - அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சத்குரு தனது 65 வயதில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இதுவரை 72 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர்.
மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு, வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளின் கமாண்டிங் ஆபிஸர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அத்துடன் மண் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வழிநெடுகிலும் நின்று கொண்டு சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களின் அன்பான வரவேற்பை மனதார ஏற்றுக்கொண்ட சத்குரு அங்கு பேசுகையில், “இன்று மட்டுமின்றி, குறைந்தப்பட்சம் அடுத்த 30 நாட்கள் நீங்கள் மண் வளப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேச வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும், மண் வளத்தை மீட்டெடுக்க சட்டங்களை உருவாக்கும் வரை நீங்கள் இதற்காக விடாது குரல் கொடுக்க வேண்டும். உங்கள் கரங்களில் இருக்கும் மொபைல் போன் ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மண் வளம் குறித்து தொடர்ந்து பேசுங்கள். இதற்காக, தினமும் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்களாவது செலவிடுங்கள்” என கூறினார்.
ஜாம்நகர் அரச குடும்பத்தின் பிரதிநிதி திருமதி. ஏக்தபா சோதா பேசுகையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசாங்கங்கள் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து வருகிறார். இது மிக முக்கியமான விஷயம்” என்றார்.
மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து வரும் சத்குரு தனது பயணத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் கடந்து மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பாவிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஆசியா மற்றும் அரேபியாவிலும், யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்ரேலிலும் சத்குரு பேரன்போடு வரவேற்கப்பட்டார். மதம், இனம், தேசம், மொழி கடந்து அனைத்து தேசத்து தலைவர்களும், பொதுமக்களும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு பேராதரவு அளித்தனர். பல மொழி பேசி, பல்வேறு இனமாக வாழும் மக்களை சத்குருவின் இந்த இயக்கம் ‘மண்’ என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துள்ளது. தனது பயணத்தின் நிறைவு பகுதியாக, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் வழியாக ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர். இதனால், #BharatWelcomesSadhguru என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தியாவில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து தொடங்கும் சைக்கிள் பேரணி, சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.
சென்னை:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் ஜூன் 5-ம் தேதி நடக்க உள்ளது.
இந்த சைக்கிள் பயணம் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக பாப் (BOB)அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து அன்றைய தினம் காலை 5 மணிக்கு தொடங்கும் இப்பயணம் அங்கிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 98842 55712 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயணம் குறித்த விளக்க நிகழ்ச்சி ஹோட்டல் சவேராவில் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது நேரடி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சர்வதேச விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பல தரப்பினர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு, 100 நாட்களில் 30,000 கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சத்குரு மே 29-ம் தேதி முதல் இந்தியாவில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும் என சத்குரு பேசினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் அணுகியுள்ளோம். மண் வளம் இழந்து வருவது பற்றி கேள்விப்படும் போது எனக்கு வேதனையாக உள்ளது. அதேசமயம், இதற்காக சத்குரு அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இவ்வியக்கம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத்குரு பதிவிட்டுள்ள பதிவில், “நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் அசோக் கெலாட் ஜி, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களது ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். மண் வளத்தை பாதுகாக்கும் கொள்கைகளை உருவாக்கி, இந்த அழகான நிலத்தில் நீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் உங்களது தலைமையில் ராஜஸ்தான் முன்னணியில் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில பஞ்சாயத் ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேஷ் சந்த் மீனா, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா மற்றும் சத்குரு கலந்து கொண்டு மண் வள மீட்பின் அவசியம் குறித்து பேசினர்.
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசுகையில், “இயற்கையில் நாம் பார்க்கும் அனைத்துமே மண்ணில் இருந்து வருகிறது; மீண்டும் மண்ணுக்கே திரும்ப செல்கிறது” என கூறினார். மேலும், “இந்த இயக்கம் சத்குருவுடைய தனிப்பட்ட இயக்கம் அல்ல, ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பயன் தரும் இயக்கம். எனவே, மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் அனைவரும் பங்காற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதற்காக உறுதி ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் லால் சந்த் கட்டாரியா, “அறிவியம் மற்றும் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் உருவாவதற்கு பல ஆண்டுகள் முன்பாக மக்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்” என கூறினார்.
விழாவில் சத்குரு பேசுகையில், “கடந்த 25 வருடங்களில் மட்டும் உலகின் 10 சதவீத நிலப்பரப்பு பாலைவனமாக மாறியுள்ளது. மண் அழிவு எந்தளவுக்கு வேகமாக நிகழ்ந்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்” என்றார். மேலும், “நம்முடைய கலாச்சாரம் மண்ணை நாம் ‘தாய் மண்’ என்றே அழைக்கிறோம். காரணம், நம்முடைய அனைத்து தாய்மார்களுக்கும் மண் தான் தாய். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுப்பட்டு இருக்கும் நம் நாட்டில் போதிய மரங்களும், கால்நடைகளும் இருப்பது அவசியம். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் இந்த கால்நடைகள் எல்லாம் காணாமல் போனால், நாமும் காணாமல் போவோம். நம் தேசத்தின் கதையும் முடிந்துவிடும்” என்றார்.
வேளாண் துறை அமைச்சரும், சத்குருவும் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். ஜெய்ப்பூர் கண்காட்சி மையத்தில் நடந்த இந்த பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் இல்லா அருண், குட்லே கான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
கோவை:
“தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ட்வீட்டுடன் சேர்த்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.
ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல.
யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில், "அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான் காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என தமிழ் மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
சென்னை:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.
நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான விஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.
நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான விஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
கோவை:
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகள் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா 112 அடி ஆதியோகி முன்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஈஷா மாட்டுமனையில் வளர்க்கப்படும் காங்கேயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மண் பானை களில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தாராபுரத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விழாவுக்கு வருகை தந்து நாட்டு மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், கோ பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழா குறித்து சத்குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மகர சங்ராந்தி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன.
மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் உயிர் நடக்கிறது. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது.
நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.
பொங்கல் நாளில் ஈஷாவில் 16 வகையான நாட்டு மாடுகளை கண்காட்சிக்கு வைத்துள்ளோம். அதற்கு காரணம், நம் நாட்டில் இத்தனை வகையான நாட்டு மாடுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குதான். நாம் டிராக்டர் போன்ற கருவிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். டிராக்டரை கொண்டு உழவ வைத்து கொள்ளலாம்.
ஆனால், மண்ணை வளப்படுத்த முடியாது. கடந்த 40, 50 வருடங்களில் ஏராளமான வெளிநாட்டு மாடுகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், நம் நாட்டு மாடுகளுக்கு தற்போது போதிய மதிப்பில்லாமல் செய்துள்ளோம். வணிக நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த செயல் நமக்கு எதிர்மறையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
நம் நாட்டில் 12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அடுத்த 30 வருடங்களில் நம் நாட்டில் தோராயமாக 25 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது என சொல்கிறார்கள்.
விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால், நாட்டு மாடுகளும் மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகள் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா 112 அடி ஆதியோகி முன்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஈஷா மாட்டுமனையில் வளர்க்கப்படும் காங்கேயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மண் பானை களில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தாராபுரத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விழாவுக்கு வருகை தந்து நாட்டு மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், கோ பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழா குறித்து சத்குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மகர சங்ராந்தி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன.
மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் உயிர் நடக்கிறது. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது.
நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.
பொங்கல் நாளில் ஈஷாவில் 16 வகையான நாட்டு மாடுகளை கண்காட்சிக்கு வைத்துள்ளோம். அதற்கு காரணம், நம் நாட்டில் இத்தனை வகையான நாட்டு மாடுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குதான். நாம் டிராக்டர் போன்ற கருவிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். டிராக்டரை கொண்டு உழவ வைத்து கொள்ளலாம்.
ஆனால், மண்ணை வளப்படுத்த முடியாது. கடந்த 40, 50 வருடங்களில் ஏராளமான வெளிநாட்டு மாடுகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், நம் நாட்டு மாடுகளுக்கு தற்போது போதிய மதிப்பில்லாமல் செய்துள்ளோம். வணிக நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த செயல் நமக்கு எதிர்மறையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
நம் நாட்டில் 12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அடுத்த 30 வருடங்களில் நம் நாட்டில் தோராயமாக 25 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது என சொல்கிறார்கள்.
விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால், நாட்டு மாடுகளும் மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்சியில் ராணுவ வீரர்களுக்கு, ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார். #InternationalYogaDay2018
ஸ்ரீநகர் :
2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.
குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018
2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.
குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018






