என் மலர்
நீங்கள் தேடியது "வைரல் பதிவு"
- கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
- தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அடுத்ததாக நடிகர் நானியுடன் இணைந்து நடித்த ஹிட் 3 படம் திரைக்கு வந்து ரூ.100 கோடி வசூலை பெற்றது.
படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஒரு கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி ஸ்ரீநிதிக்கு எப்போ திருமணம் ஆச்சு, அவருக்கு குழந்தைகள் இருக்கின்றனரா? என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
விமர்சனங்களுக்கு ஸ்ரீநிதி பதிவு விடையை கொடுத்தது. அவரது பதிவில், "நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை" என பதிவிட்டுள்ளார்.
- பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்.
- 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
மழை காலத்தில் மாணவ-மாணவிகள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்து காலையிலும் அது தொடரும் என்ற பட்சத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும்.
காலநிலைக்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யும் போது விடுமுறை அறிவிப்பும் காலையில் தான் வெளியிடப்படும்.
விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மழை பெய்வதை பார்த்து இன்று பள்ளிக்கு விடுமுறையா? இல்லாயா? என்று கலெக்டரின் முகநூல் பக்கத்தில் மாணவ -மாணவிகள் நேரடியாக கேள்வி கேட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த வரும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமைக்கு தகுந்தவாறு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இன்றைக்கு பள்ளி விடுமுறையா? இல்லையா? என்று நேரடியாக கேள்வி கேட்டி ருக்கின்றனர். ஏராளமானோர் கலெக்டரிடம் அந்த கேள்வியை கேட்டனர்.
மாணவ-மாணவிகள் அந்த கேள்விக்கு கலெக்டரும் பதில் தெரிவித்து பதிவு வெளியிட்டார். அவரது பதிவில் "விடுமுறை இல்லையே, பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பள்ளி மாணவர்களின் கேள்விக்கு கலெக்டர் அளித்திருக்கும் பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கலெக்டரின் இந்த பதிவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் "லைக்" செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
- இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவி இருக்கின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் விரும்பிக் வேலைக்கு சேர்ப்பது இந்தியாவில் தயாரான பட்டதாரிகளையே என்ற அளவுக்கு நிலைமை இருக்கும் சூழலில் அதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர், 'நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார், நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகாக செயல்படும்' என்று கூறி சிஇஓவை பூரிக்க வைத்துள்ளார். ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஇஓ, அவர்களின் இந்த உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமன்ட் செக்சனில் குவித்து வருகின்றனர்.







