என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331664
நீங்கள் தேடியது "காட்டுயானைகள்"
டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார்(வயது43). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் யானை தாக்கி இறந்தார்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து யானையை விரட்ட முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.
கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓவேலி அடுத்த பாரம் பகுதியை சேர்ந்த மாலு என்ற மும்தாஜ் யானை தாக்கி உயிரிழந்தார்.
ஆனால் அவரை தாக்கியதும், ஆனந்தகுமாரை தாக்கியதும் ஒரே யானையா அல்லது வேறு யானையா என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து 3 நாட்களில் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் மக்களும் அச்சம் அடைந்து, உடனே இங்கு சுற்றி திரியக்கூடிய காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து நேற்று கூடுதலாக முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.
4 கும்கி யானைகள் உதவியுடன் பாரம், 4-ம் நெம்பர் உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறையினர் காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல கூடாது. மேலும் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை நடவு செய்யக்கூடாது. வீடுகளின் அருகே பலா மரங்கள் இருந்தால், அதில் விளைந்துள்ள காய்கள், பழங்களை அகற்ற வேண்டும். பலா பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என்றார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார்(வயது43). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் யானை தாக்கி இறந்தார்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து யானையை விரட்ட முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.
கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓவேலி அடுத்த பாரம் பகுதியை சேர்ந்த மாலு என்ற மும்தாஜ் யானை தாக்கி உயிரிழந்தார்.
ஆனால் அவரை தாக்கியதும், ஆனந்தகுமாரை தாக்கியதும் ஒரே யானையா அல்லது வேறு யானையா என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து 3 நாட்களில் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் மக்களும் அச்சம் அடைந்து, உடனே இங்கு சுற்றி திரியக்கூடிய காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து நேற்று கூடுதலாக முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.
4 கும்கி யானைகள் உதவியுடன் பாரம், 4-ம் நெம்பர் உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறையினர் காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல கூடாது. மேலும் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை நடவு செய்யக்கூடாது. வீடுகளின் அருகே பலா மரங்கள் இருந்தால், அதில் விளைந்துள்ள காய்கள், பழங்களை அகற்ற வேண்டும். பலா பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என்றார்.
காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முள்ளூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களையொட்டி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக வனத்தில் வசிக்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி திரிந்து வருகின்றன.
மேலும் கிராமங்களையொட்டிய தேயிலை தோட்ட பகுதியில் முகாமிடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியில் வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முள்ளூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே யானைகள் நடமாட்டம் இருப்பதால், குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களையொட்டி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக வனத்தில் வசிக்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி திரிந்து வருகின்றன.
மேலும் கிராமங்களையொட்டிய தேயிலை தோட்ட பகுதியில் முகாமிடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியில் வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முள்ளூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே யானைகள் நடமாட்டம் இருப்பதால், குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X