என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swampland"

    • விடியா திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளயாடுவதை ஏற்க முடியாது.
    • பள்ளிக்காணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.

    தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கும் கொள்ளை மாடல் விடியா திமுக ஸ்டாலின் குடும்ப அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி குடும்ப ஆதிக்கத்தை வளர்க்க நினைக்கும் மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சியின்போது கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் கபளீகரம் செய்ததும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களை விசாரிக்க 2011-ல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 'நில அபகரிப்பு பிரிவு' என்ற தனிப் பிரிவை தமிழக காவல் துறையில் உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டதும் மக்கள் நன்கறிவார்கள்.

    2021-ல் விடியா திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் மீண்டும் தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் சொத்துக்களை மிரட்டி கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான எக்கர் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது.

    எனது தலைமையிலான அம்மாவின் அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க ஏற்கெனவே 16 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை 2 விரிவுபடுத்தி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடி செலவில் 'தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதி' (National Adaptation Fund for Clin Change) கீழ், 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் "பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டத்தினை" 2018-2019ல் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி, சதுப்பு நிலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிக்காணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.

    இதன்படி, 'ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்தியோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பாமை தீர்ப்பாயம் வழக்கு எண். OA No: 91. நாள் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை CMDA தன்னுடைய அலுயார்களுக்கு 610.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

    சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை விடியா திமுக சு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

    என்னதான் நவீன தொழில்நுட்பத்துடன் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், அக்கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் அமைவனும், அதன்மேல் எழுப்பப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியதே! என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும், ஒரு பெரும் வெள்ளத்திற்கும். புயலுக்கும் அக்கட்டிடங்கள் தாங்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்திட்டத்தில் விடியா திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளயாடுவதை ஏற்க முடியாது.

    சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகார திட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன? இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கை கட்டி வேடிக்கை பார்க்காது. கழக அரசு அமைந்தவடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன.
    • வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் பகுதி சிறப்பு பெற்றது. வழக்கமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காட்சிஅளிக்கிறது. இதனால் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன. இதுகணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

    தமிழகத்தின் பல் வேறு பகுதிகளுக்கும், தமிழகம் வழியாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் வலசை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்து செல்வதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்பு தற்போது முடிந்து உள்ளது.

    இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் வலசை பறவையான நீல சோலைபாடி பறவை இலங்கை செல்லும் வழியில் பள்ளிக்கரணைக்கு வந்துள்ளன.புது வரவாக, நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப் பான் ஆகிய இரண்டு பறவைகள் இணைந்துள்ளன. இத்துடன் சேர்த்து இங்கு, 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. பழுப்பு மார்பு ஈ பிடிப்பான், தென் சீனா மற்றும் மியான்மர், தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும். சிறு பூச்சிகளையே இது உணவாக எடுத்துக் கொள்ளும் என்பதால், நீர் நிலை மட்டுமல்லாது புதர் காடுகளில் தான் இது காணப்படும். நீல தொண்டை பிடிப்பான், செந்தலை பூங்குருவி, அரசவால் ஈ பிடிப்பான், கொண்டை குயில், பழுப்பு ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் பள்ளிக்கரணையில் தற்போது முகாமிட்டுள்ளன என்றார்.

    • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.
    • டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.

    டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நில பகுதியை சுற்றி கரைகள் அமைத்தல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளன.

    ×