search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Gram Sabha Meeting"

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது,

    மாப்பிள்ளையூரணி சிலுவைப்பட்டி ஆர்.சி.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைமை வகித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணகுமார் பேசினார்,

    அப்போது அவர் கூறுகையில், மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களை பெற்று ஊராட்சியியை முழுமையாக வளர்ச்சி அடைய செய்வதற்காக செயலாற்றுகிறோம்.

    கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று எம்.பி,அமைச்சர் ,எம்.எல்.ஏ, கலெக்டர் என அனைவரின் ஒத்துழைப்புடன் திட்டங்களைப் பெற்று செயல்படுத்துவோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் பெற்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்த ஊராட்சியாக மாப்பி ள்ளையூரணி ஊராட்சியை மாற்றி காட்டுவோம் என்று பேசினார். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செ ல்வி,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஒன்றிய கவுன்சி லர்கள் மற்றும் மின்வாரிய அலுவ லகர்கள், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி,ஜீனத்பீவி,பாரதிராஜா,அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி,சக்திவேல், ராணி,வசந்தகுமாரி,பாண்டியம்மாள்,மிக்கேல் அருள் ஸ்டாலின்,உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து,ஜேசுராஜா, ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துகுடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.

    சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும்

    தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பிள்ளையூரணி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பட்டியலிட்டு பேசினார்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா, முருகேஸ்வரி,சொர்ணா, சுப்புலெட்சுமி, தெய்வராணி, அரி கிருஷ்ணன், முத்து கணபதி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் சுப்பையா வரவேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி கலந்து கொண்டார். சிறப்பு கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஊராட்சியில் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளான சாலை வசதி, வடிகால், பேவர் பிளாக் சாலை, தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் பராமரித்தல், வரி வசூலை முழுமையாக வசூலித்தல் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் 2 ஆயிரம் மரங்களை வளர்த்தல் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    ×