search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி,ஜீனத்பீவி,பாரதிராஜா,அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி,சக்திவேல், ராணி,வசந்தகுமாரி,பாண்டியம்மாள்,மிக்கேல் அருள் ஸ்டாலின்,உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து,ஜேசுராஜா, ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துகுடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.

    சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும்

    தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பிள்ளையூரணி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பட்டியலிட்டு பேசினார்.

    Next Story
    ×