என் மலர்
நீங்கள் தேடியது "social activist murder"
- ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.
- 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அதிமுக பிரமு கரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறை முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார்.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப் பட்டார்.
இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராசு, ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் குவாரி உள்ளிட்ட வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி புதுக்கோட்டை இரண்டாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொருத்தரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
நீதிமன்றம் அனுமதிக்கும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
- அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூர் பகுதியில் இயங்கி வந்த கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக போராடி வந்தார். மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்து, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 2 கல்குவாரி அதிபர்கள் பின்னணியில் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து லாரி ஏற்றி கொலை செய்த மினி லாரி உரிமையாளர் திருமயம் முருகானந்தம் (56),
அவருக்கு உதவியாக செயல்பட்ட மினி லாரி டிரைவர் காசிநாதன்(45), துளையானூர் கல்குவாரி உரிமையாளர் ராசு( 54), அவரது மகன் தினேஷ் (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மற்றொரு கல்குவாரி உரிமையாளர் ராமையா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கு அதிரடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு நேற்று மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்குகிறார்கள்.கொலை நடந்த இடத்தை முதலில் ஆய்வு செய்கிறார்கள்.
பின்னர் திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு விவரங்களை கேட்டறிந்து விசாரணையை தொடர் வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே புகாருக்குள்ளான ராசு மற்றும் ராமையா கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆய்வு நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இந்த ஆய்வு நேற்று பிற்பகல் நிறைவடைந்தது இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
நவீன ட்ரோன் மூலம் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
- கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலை வீசி தேடி வருகின்றனர்
- கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூரில் இயங்கி வரும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக கனிமங்கள் தோண்டி எடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தார்.
மேலும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நிர்வாகத்திடமும் அவ்வப்போது புகார் அளித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலியை லாரி ஏற்றி திட்டமிட்டு கொலை செய்தனர். இது தொடர்பாக லாரி ஏற்றி கொலை செய்த திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம்(56), அதற்கு உறுதுணையாக பின் தொடர்ந்து வழிகாட்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது லாரி டிரைவர் காசிநாதன், கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக கூறப்படும் திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் ராசு(54)அவரது மகன் தினேஷ் (28 )ஆகிய 4 பேரை திருமயம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலைவீசி தேடி வருகின்றனர்
கல்குவாரி முறைகேடு தொடர்பாக ஜகபர் அலி தான்கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஜகபர் அலியால் குற்றம் சாட்டப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகியோரின் கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வில் திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேர் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.
இதில் எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்று 2-வது நாளாக காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,
புகாருக்கு ஆளாகியுள்ள ராசு, ராமையா ஆகியோர் நடத்தும் கல்குவாரி மற்றும் கிரஷர்களின் அனுமதி ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது.
இருப்பினும் சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாக ஏற்கனவே ராமையாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.6.70 கோடி அபராதமும், ராசுவுக்கு ரூ.12 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆய்வு செய்யப்பட்டதில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
அளவீடும் பணிகள் மேலும் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அளவிடும் பணி முடிந்ததும் அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கல்குவாரி மற்றும் கிரசர்களில் பல கோடி கனிம வளம் முறைகேடு நடந்துள்ளது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்று உரிமங்களை புதுப்பிக்காமல் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் உதயகுமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதேபோன்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராகவும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
சமூக ஆர்வலரான இவர் திருமயம் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டி வந்தார். மேலும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குவாரி அதிபர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஆனால் அபராத தொகை வசூலிக்கப்படவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அபராத தொகை வசூலிக்காதது குறித்து மீண்டும் ஜகபர் அலி அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.
மேலும் 20 ஆயிரம் டாரஸ் லாரி அளவுக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அனுமதி இல்லாத இடத்தில் கொட்டப்பட்டு உள்ளது என உதவி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
அதை தொடர்ந்து அந்த கனிம வளம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணி பணி நடைபெற்றுள்ளது. இது குறித்து கடந்த 13-ந் தேதி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் அரசு அலுவலர்களிடம் கனி கனிமவள கொள்ளை குறித்து மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்றபோது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் திருமயம் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரது மனைவி மரியம் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் திருமயம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் 2 கல்குவாரி அதிபர்கள் சேர்ந்து திட்டமிட்டு அவரை லாரி ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் (56 ) போலீசில் சரணடைந்தார்.
இதை தொடர்ந்து லாரியை ஏற்றி சமூக ஆர்வலரை கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் காசிநாதன் (45) கைது செய்யப்பட்டார். இவர் சமூக ஆர்வலரின் நடமாட்டத்தை கண்காணித்து முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை பின்னணியில் கல்குவாரி உரிமையாளர்களான திருமயம் பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28) மற்றும் மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் கல்குவாரி அதிபர் ராசு மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கைதான லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கல்குவாரி அதிபர்கள் ராசு மற்றும் ராமையா ஆகியோரின் சதி திட்டத்தின் படி திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன். அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழி குறித்து எனது மினி லாரி டிரைவர் காசிநாதனை கண்காணிக்க செய்து தகவல் அளிக்க சொன்னேன்.
அவரும் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து எனக்கு தகவல் அளித்தார். அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டபடி மினி லாரியை மோதச் செய்தேன். முதல் முறை மோதியபோது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் எனக் கருதிய நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் கொலையும், லாரி உரிமையாளரின் வாக்குமூலமும் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல் குவாரி முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருமயம் பகுதியைச் சேர்ந்த கல் குவாரி அதிபர் ராசு, அவரது மகன் தினேஷ் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இன்னொரு கல்குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சமூக ஆர்வலர் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகிய இருவரது கல் குவாரிகளிலும் இன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த குவாரிகள் திருமயம் அருகே துளையானூரில் இருவரது குவாரிகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்த சோதனை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா, திருச்சி சுரங்கத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன், கரூர் உதவி இயக்குனர் சங்கர் மற்றும் பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கல் மற்றும் கனிம வளம் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடத்துகிறார்கள். இந்த சம்பவம் கல் குவாரி அதிபர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் (வயது 75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார்.
இவர் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (33) என்பவர் வந்தார். அவர் திடீரென மோடிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்யலாம்? என கூறி முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.
மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #BJP #LokSabhaElections2019