search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smallpox"

    • விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
    • கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.

    உடுமலை:

    உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.

    அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,

    ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.

    உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • கால்நடை துறை சார்பில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்
    • மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் ஈ, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

    காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளுக்கு கருச்சிதைவு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    வேலூர் மாவட்டத்தில் இந்தநோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் மாடுகளுக்கு இந்நோய் பரவி வருகிறது. நோய் பாதித்த மாடுகளுக்கு தடுப்பூசி கால்நடை துறை சார்பில் போடப்பட்டு வருகிறது.

    சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தைவெளி பகுதியில் மாடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாடுகள் சுருண்டு விழுகிறது. இந்த பகுதியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தி, தடுப்பூசி போட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×