மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு

கால்நடை துறை சார்பில் தடுப்பூசி போட்டு வருகின்றனர் மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்
பெரியம்மை நோய் பாதிப்பு காரணமாக மாட்டின் தோல்களில் தடிப்புகள் ஏற்பட்டுள்ள காட்சி.
பெரியம்மை நோய் பாதிப்பு காரணமாக மாட்டின் தோல்களில் தடிப்புகள் ஏற்பட்டுள்ள காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் ஈ, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளுக்கு கருச்சிதைவு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.

வேலூர் மாவட்டத்தில் இந்தநோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் மாடுகளுக்கு இந்நோய் பரவி வருகிறது. நோய் பாதித்த மாடுகளுக்கு தடுப்பூசி கால்நடை துறை சார்பில் போடப்பட்டு வருகிறது.

சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தைவெளி பகுதியில் மாடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாடுகள் சுருண்டு விழுகிறது. இந்த பகுதியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தி, தடுப்பூசி போட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com