என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உஷா வான்ஸ்"

    • 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார்.
    • உஷாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கோதாவரிக்கும் செல்வார்கள்.

    அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வந்துள்ளார்.

    டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் அவர்கள் வந்த விமானம் 9.45 மணிக்கு தரை இறங்கியது. அரசு சார்பில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதைதான், பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தது. 

     துணை அதிபர் வான்சுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் உடன் வந்துள்ளனர்.

    டெல்லி விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் வான்சும், அவரது குடும்பத்தினரும் டெல்லியில் உள்ள நாரா யண் அக்ஷர்தாம் கோவி லுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் வழிபாடுகள் செய்தனர்.

    இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இன்று காலை அவர் நாராயண் ஆலயத்தில் வழிபாடு முடித்ததும் டெல்லியில் உள்ள பாரம்ப ரிய இந்திய கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்துக்கு சென்றார். அங்கு விற்கப்படும் பாரம்ப ரிய பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    இதையடுத்து டெல்லி மவுரியா நட்சத்திர ஓட்ட லுக்கு சென்று தங்கி ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகலில் அவரை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேசுகிறது.

    இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு பிரதமர் மோடியும், வான்சும் சந்தித்து பேசுவார்கள். அதே சமயத்தில் இரு நாட்டு குழுக்களும் சந்தித்து பேச்சு நடத்தும்.

    அமெரிக்கா சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தலைமையிலான குழுவினர் இடம் பெறு வார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமை யில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

    பேச்சுவார்த்தையின் போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறிப்பாக இருதரப்பு வர்த்தகம், வரி, ராணுவம், விண்வெளி ஆய்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் வான்சுக்கும், அமெரிக்க அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்.

    பிரதமர் மோடியுடன் சந்திப்பு முடிந்தவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தங்குவார். நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) வான்சும், அமெரிக்க அதிகாரிகளும் ஆக்ராவுக்கு செல்ல உள்ளனர். அங்கு தாஜ்மகாலை துணை ஜனாதிபதி வான்சும், குடும்பத்தினரும் கண்டுகழிக்க உள்ளனர்.

    மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பும் வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார்.

    • ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார்.
    • உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் தேதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

    வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் தேதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு.
    • மூன்று பயணமாக கிரீன்லாந்து செல்கிறார்.

    டென்மாாக்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழுவில் துணை அதிபர் ஜே.டி. வான்சின் மனைவி உஷா வான்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் மார்ச் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை கிரீன்லாந்தில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தையும், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் பார்வையிட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதற்கு கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்ன வேலை? எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி இங்கு என்ன செய்ய போகிறார் என்றார். இதேபோல் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிகாரிகளின் கிரீன்லாந்து பயணம் குறித்து அதிபர் டிரம்ப் கூறும் போது, "கிரீன்லாந்தை சேர்ந்த நிறைய பேரை நாங்கள் கவனித்து வருகிறோம். அவர்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுவதன் மூலம் ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கிரீன்லாந்து எதிர்காலத்தில் எங்களுக்கானதாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

    ×