என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டு"

    • சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு.
    • உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் அப்பில் புகார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு பார்சலில் சிக்கன் வாங்கியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அதனை எடுத்துசென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது அந்த சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக பார்சல் வாங்கிய உணவகத்திற்கு சென்றனர். மேலும் சிக்கனில் வண்டு இருந்ததாக கூறி அதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்து விளக்கம் கேட்டனர். ஆனால் உணவக ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த சட்டக்கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் செயலின் மூலமாக புகார் அளித்தனர். அதில் உணவக ஊழியர்கள் அளித்த விளக்கம் தொடர்பாகவும் பதிவிட்டு உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

    • வந்தே பாரத் ரெயிலில் கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரெயில்வே அதிகாரிகள் பயணியிடம் மன்னிப்பு கேட்டனர்.

    நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாம்பாரில் வண்டுகள் இருந்தது தொடர்பாக பயணி புகாரளித்தபோது அது 'சாம்பாரில் போடும் சீரகம்' என ரெயில்வே அதிகாரிகள் புது விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து சக பயணிகளும் சாம்பாரில் இருந்தது வண்டு தான் என உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்கள் பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் வண்டுகள் இருந்த உணவை விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு தெற்கு ரெயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

    ×