என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபாலோயர்ஸ்"

    • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
    • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

     

    பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • 100 கோடி பாலோயர்ஸ்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.
    • கால்பந்து அரங்கில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்

    லிஸ்பன்:

    பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டொ (39), போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

    எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, அண்மையில், UR. Cristiano எனும் யூடியூப் சேனலை தொடங்கினார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து வினாடிக்கு வினாடி சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் அவரை 5 கோடி பேர் பாலோ செய்கின்றனர்.

    இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து 100 கோடி பாலோயர்ஸ் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

    யூடியூபில் 5 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

    இதைக் கொண்டாடும் விதமாக போர்ச்சுக்கல் கால்பந்து அணி புதிய போஸ்டரை வெளியிட்டது. ரசிகர்கள் இதனை உற்சாகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    ×