என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கடி"

    • குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பரந்து விரிந்து வரும் சென்னை பெருநகரத்தின் பகுதிகளில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். 200 வார்டுகள் இருந்தாலும் புதிதாக விரிவாக்கம் அடைந்துள்ள பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வார்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும். மக்கள் பெருக்கத்தின் மூலம் விரிவடைந்து வரும் சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கடி தொல்லை என்பது தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. தெருக்களில் ஓடி விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    பூங்காக்களில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லும் போது அது பொது மக்கள் மீது திடீரென பாய்ந்து கடித்து விடுவதால் பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்களும் பயத்துடன் தான் செல்கிறார்கள்.

    வீட்டின் வெளியே விளையாடும் போதும், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று திரும்பும் போதும் குழந்தைகளை தெரு நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. தொடர்ந்து தெரு நாய்களின் தாக்குதல் எல்லை மீறி போகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குறைந்தபாடில்லை.

    கடந்த 6 மாதங்களில 10 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. பொது மக்களிடம் இருந்து புகார்கள் குறைந்தாலும் சமீப காலமாக நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. நாய்களின் இனப்பெருக்கததை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லா மண்டலங்களிலும் வாகனங்களில் ஊழியர்கள் தினமும் சென்று நாய்களை பிடிக்கின்றனர். ஆனாலும் தெரு நாய்களின் ஆக்ரோஷம் குறையவில்லை. சென்னையில் நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.


    தெரு நாய் தாக்குதலின் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெருக்களில் விளையாட அனுமதிப்பது இல்லை.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நாய்கடி வழக்குகள் பதிவாகிறது. ஆனாலும் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் மிக குறைவு. வடசென்னை பகுதியில் நாய்கடி சம்பவம் அதிகளவில் நடந்தாலும் பதிவு செய்யப்படாத வழக்குகள் பல உள்ளன.

    நாய் பிடிக்கும் வாகனங்களை பார்த்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி இயக்கமோ, கிருமி நீக்கம் செய்வதற்கான முயற்சியோ இல்லை என தண்டையார்பேட்டை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட சென்னையில் தெரு நாய்கள் காது வெட்டும் மற்றும் தோல் அலர்ஜியுடன் சுற்றித்திரிவதை காண முடிகிறது. இது மற்ற தெரு நாய்களுக்கு பரவக்கூடும். இது ரேபிஸ் நோய் பாதிப்பை உண்டாக்கும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் உசேன் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு அண்டும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்ப தெரிய வந்தது. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசாவில் 22 மாதங்களில் தினமும் 777 பேரை நாய்கள் தாக்கியுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
    • 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    ஒடிசாவில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், அம்மாநில அரசு வழங்கிய தரவுகளின்படி, ஒடிசாவில் ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5.20 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது, தவறான கோரைகள் அல்லது வளர்ப்பு நாய்கள் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 777 நபர்களைக் குறிவைத்துள்ளன.

    காங்கிரஸின் ராயகடா எம்எல்ஏ கத்ரகா அப்பலா சுவாமியின் கேள்விக்கு, மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோகுலானந்த மல்லிக் பதில் அளித்தார். அப்போது அவர்," 22 மாதங்களில் ஒடிசாவில் மொத்தம் 5,20,237 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்றார்.

    அதன்படி, 2023ல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    2024 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 33,547, 32,561 மற்றும் 29,801 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    2019ம் ஆண்டில் கால்நடை கணக்கெடுப்பின்படி, ஒடிசாவில் 17.34 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவந்துள்ளது.

    மேலும், சட்டமடையில் "விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதி, 2023-ஐ பின்பற்றி, நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் திட்ட அங்கீகாரச் சான்றிதழைப் பெற்ற நிறுவனங்கள் மூலம் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக" அமைச்சர் கூறினார்.

    2022-23 நிதியாண்டில் ஒடிசாவின் எட்டு நகர்ப்புறங்களில் 4,605 தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டதாகவும் மல்லிக் சபையில் தெரிவித்தார்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பகவான் மண்ட்லிக் கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார்.
    • நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

    மும்பை:

    மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (வயது 27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.

    இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது

    மேலும் அந்த மாநகராட்சியின் மருத்துவ சுகாதார அதிகாரி தீபா சுக்லா கூறுகையில், "எந்த விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முன்னெச்சரிக்கையாக உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.

    நாய், பூனை கடித்ததை தொடர்ந்து தடுப்பூசி போட்டு இருந்தால் வாலிபரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோய் இருக்காது.

    இதில் அலட்சியம் காட்டிய வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×