என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகேந்திரன் கைது"

    • வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
    • நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.

    அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2ஆவது மகன் அஜித் திருமணம் செய்துகொண்டார். அஜித் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். துக்க நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர்.

    • ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான A1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    சென்னையில் ரவுடி நாகேந்திரன் மரணத்தையடுத்து கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கர்நாடகா மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் (52) என்பவர் கடந்த மே மாதம் 26-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மாநகராட்சி வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கர்நாடக வால்மீகி வளர்ச்சிக்கழகத்தின் நிதி தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த முதல் நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குகளுக்கு மாநகராட்சி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் மாற்றப்பட்டதும் பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் மற்றும் ராய்ச்சூர் ஊரக சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள டாலர்ஸ் காலனி வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சரும், பெல்லாரி ஊரக சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நாகேந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது நாகேந்திரனிடம் ரூ.187 கோடி ஊழல் தொடர்பான பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.
    • நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி மறுப்பு.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் நாகேந்திரனை அனுமதிக்கக்கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    ×