என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

    • ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான A1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    சென்னையில் ரவுடி நாகேந்திரன் மரணத்தையடுத்து கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×