என் மலர்
நீங்கள் தேடியது "2027 உலகக் கோப்பை"
- மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
- ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.
சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள்.
இந்த நிலையில் 2027-ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியதாவது:-
ரோகித் சர்மா, விராட் கோலி உலகத் தரத்திலான வீரர்கள் ஆவார்கள். 2027-ல் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. ரோகித் , கோலி முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றார்.
- கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்.
- பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், இதற்கான வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து இணையத்தில் வெளியான தகவல்களில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை தேர்வு செய்வதில் பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது.
மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக கவுதம் கம்பீர் பி.சி.சி.ஐ.-இடம் சில நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பயிற்சியாளராக தான் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அடுத்த பயிற்சியாளர் விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டதாகவும், இதில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தவிர மேலும் சிலர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் விவகாரத்தில் கவுதம் கம்பீரின் பெயர் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், 2027 உலகக்கோப்பை தொடர் வரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான இந்திய அணிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.






