என் மலர்
நீங்கள் தேடியது "லேசர் ஒளிக்கற்றைகள்"
- சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது .
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் தரையிறங்கும்போது லேசர் ஒளியை செலுத்தினால் விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
கிண்டி பகுதியில் இருந்து சக்திவாய்ந்த லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் பரங்கிமலை, கிண்டி போலீசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்
சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட 3வது சம்பவம் இது ஆகும். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை சென்னை விமான நிலையாயத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.
2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- ஒளி உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது.
- நீரிழிவு நோயில், ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது.
தினமும் நாம் கடந்து போகும் சாலைகளில் கட்டிடங்களில் மின்னும் எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்றவை நீரிழிவு நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வின் படி இரவில் செயற்கை வெளிப்புற ஒளி உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில், ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்தி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சாதாரண மக்களை விட இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் அழகுக்காக சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடலானது எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.
ஆய்வில் கண்டறியப்பட்ட ஆச்சரியமான உண்மை என்னவென்றால் பிரகாசமான விளக்குகளின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதால், அந்த நபர்களின் பி.எம்.ஐ. அளவும் அதிகமாகும். இவர்கள் உடல் செயல்பாடுகளை செய்தாலும், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது.
காலையில் அதிக கார்டிசோல் ஹார்மோன் காரணமாக, சர்க்கரையின் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாம் காலையில் அதிக உடல் உழைப்புடன் இருக்கிறோம். ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, கார்டிசோல் ஆதிக்கம் செலுத்தும் போது மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிக்கிறது.






