என் மலர்
நீங்கள் தேடியது "ஜெஎன்1 வைரஸ்"
- ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஜெ.என்-1 என்ற வகை கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் தினமும் ஏராளமானோருக்கு தொற்று பாதித்து வருவதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,634 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் கேரளாவில் தற்போதைய கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்நிலையில் ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜேஎன்1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்று உலகமெங்கும் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் நேற்று 4 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப் பட்டதாகவும், கர்நாடக மாநிலத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் வெளிவரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவலின் மொத்த பாதிப்பு 4000-ஐ கடந்து அதிகரித்தாலும், ஜேஎன்1 வைரஸ் வீரியம் குறைவு தான் என்றும், பாதிக கப்பட்டவர்களுக்கு உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






