என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்தூர்பேட்டை விபத்து"

    • சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது.
    • விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சந்தோஷ் (வயது28). இவரது உறவினர் பாக்கியலட்சுமி(55). இவர் கடலூர் பாதிரிக்குப்பத்தில் வசித்து வந்தார். இவரை அழைத்து செல்வதற்காக சந்தோஷ் காரில் கடலூர் வந்தார். பின்னர் பாக்கியலட்சுமியை அழைத்து கொண்டு சேலம் புறப்பட்டார்.

    காரில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் பயணம் செய்தார். காரை சந்தோஷ் ஓட்டி சென்றார். இந்த கார் இன்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட செம்பியன்மாதேவி கன்னிமார் கோவில் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக 35 டன் தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. இந்த லாரி டிரைவர் இன்டிகேட்டர் போடாமல் திடீரென வலது புறமாக செல்ல முயன்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற சந்தோஷ், பாக்கியலட்சுமி, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி சென்றவர் தஞ்சை மாவட்டம், மாரனேரி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பது தெரியவந்தது. அவர் விபத்து நடந்ததும் லாரியை அங்கே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது. 

    • விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சினை சாலையோரமாக தூக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்காவில் உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி ஜெயா (40), அந்தப் பகுதியில் மகளிர் சுய உதவி குழு ஒன்றின் தலைவியாக இருந்தார்.

    இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் உதவி பெற சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கையொப்பமிட ஜெயா அழைக்கப்பட்டார். இதற்காக தனது கணவர் மற்றும் 2 மகள்களான வசந்தி (18), வைதேகி (14) ஆகியோருடன் நேற்று இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை ஜெயாவின் கணவர் அழகுராசு ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ எதிரில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் ராமேஸ்வரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ், காரின் மீது அதிவேகமாக மோதி சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயா மற்றும் அவரது மூத்த மகள் வசந்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அழகுராசு, மற்றொரு மகள் வைதேகி மற்றும் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த எடக்கல் போலீசார், அந்த பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை வேன் கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
    • சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 15 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேனை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த வேன், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கியிருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அவ்வழியே சென்றவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் மோகன், அதில் பயணம் செய்த கவிதா (35), பிரபாகரன் (40), லட்சுமி (35), புகழேந்தி (50), ஆன்டிரியா (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாற்று வாகனம் மூலம் கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×