என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனில் ஆன்டனி"

    • ஏற்றுமதி உற்பத்தியில் தமிழ்நாடு வலிமை அடைந்துள்ளது.
    • தமிழகத்தில் ரெயில்வே அதிகளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளர் அனில் ஆன்டணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது, 2047-ம் ஆண்டுக்குள் முழு பலத்துடன் கூடிய வளர்ச்சிமிக்க பாரதம் என்ற நோக்கத்திற்கு நிச்சயமாக அடித்தளமிட்டு உள்ளது.

    நாட்டின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள், மகளிர், மீனவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் தகுந்த பட்ஜெட்டாக, இது வெளிப்படையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சித் திட்டத்தில் தமிழகம் மிகவும் ஒருங்கிணைந்த பங்கை கொண்டுள்ளது. ஏற்றுமதி உற்பத்தியில் தமிழ்நாடு வலிமை அடைந்துள்ளது. இதற்கு மத்திய அரசு பக்க பலமாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு வாகனங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இந்தியா இனி வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்காது. இந்தியாவின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் 127 மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் ரெயில்வே அதிகளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. அவர்கள் அதிகாரத்தை பயன்டுத்தி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளனர். அவர்களது ஆட்சியில் மக்களிடம் மகிழச்சி இல்லை. இந்தியா தனது நிலைப்பாட்டை எப்போதும் மாற்றாது. யாருடைய அழுத்தத்திற்கும் இந்தியா அசைந்து கொடுக்காது. உள்ளூர் விவசாயத்திற்கு எப்போதும் மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று நியமனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×