search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம் - ஜே.பி.நட்டா அறிவிப்பு
    X

    பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம் - ஜே.பி.நட்டா அறிவிப்பு

    • பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று நியமனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×