search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anil Antony"

    • பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று நியமனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய செயலாளராக மன்ஜிந்தர் சிங் சிர்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • அனிலின் முடிவு மிகவும் தவறானது என ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
    • பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி.

    சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய அனில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில், அனில் அந்தோணி பா.ஜ.க.வில் சேர்ந்தது பற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தியுள்ளது. அது ஒரு மிக தவறான முடிவு. ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் இந்தியாவின் அடித்தளம் ஆகும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததும், பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் நீர்த்துப்போக செய்து வருகின்றனர்.

    பா.ஜ.க. சீரான தன்மையில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கருத்து. அவர்கள் நாட்டின் அரசியல் சாசன மதிப்புகளை அழித்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

    • ஏ.கே.அந்தோனி முன்னாள் ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர்.
    • ஏ.கே.அந்தோனி மகன் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    புதுடெல்லி:

    மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோனி. இவர் முன்னாள் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர்.

    சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ×