என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் திருமணம்"

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி அவர்கள் சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

    இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வேமுலவாடா கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரும் சாமி சன்னதியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீநிவாஸ் பிங்கி கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    ஆட்டோ டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
    • வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கே.சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் யாதவ். இவரது மகன் சாய் சைதன்யா. இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றார்.

    பட்டப்படிப்பு முடித்து பின்னர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

    அப்போது தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்த ரியா என்பவருடன் சாய் சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

    அதன்படி நேற்று அமினாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சாய் சைதன்யா மற்றும் ரியா திருமணம் இந்து முறைப்படி பிரமாண்டமான முறையில் நடந்தது.

    இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×