என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்பதன கிடங்கு"

    • கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
    • புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், 10 கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை கடைகள், குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை அமைத்து தர வேண்டும்.
    • தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி நிறுவனர் முனுசாமி இல்லத்தில் விவசாயிகளை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் மிக அதிக அளவு பயரிடப்படுகின்றன, குறிப்பாக அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

    அந்தியூரில் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதனை விரைவு படுத்தி கட்டுமான பணிகளை தொடங்கப்படு–மேயானால் சுமார் 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

    எனவே தோனிமடுவு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டவர்,

    பர்கூர் கால்நடை ஆராய்ச்சி மையம் தற்போது செயல்பாடு இல்லாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இதில் கொங்குதேச மறுமலர்ச்சி கட்சியின் நிறுவனர் முனுசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்கு அனுமதி அளிக்க வேண்டும்

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், 12 கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை கடைகள், குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை.
    • கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ, மளிகை என சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. மார்க்கெட்டின் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பில் குளிர்பதன கிடங்கு உள்ளது. விற்பனை ஆகாமல் தேக்கமடையும் காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுத்திடும் வகையில் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தில் அவற்றை இந்த கிடங்கில் தேக்கி வைத்து வந்தனர். ஆனால் இந்த குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை. இதனால் வியாபாரிகள் பலர் சொந்தமாக குளிர்பதன கிடங்கு அமைத்தும் தனியார் குளிர்பதன கிடங்குகள் மூலமும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கை நவீன முறையில் சீரமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மார்க்கெட்டில் கழிவுகளை அகற்றுவது, சுகாதாரம், குடிநீர், மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐ.ஐ.டி. மூலம் விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளன. எனவே விரைவில் இதற்கான பணிகள் முடிந்து குளிர்சாதன கிடங்கு செயல்பாட்டுக்கு வரஉள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 4 இடங்களில் போர்வெல் அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து மார்க்கெட் வளாகம் முழுவதும் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரி யத்திற்கு வரி செலுத்தாத காரணத்தால் மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ குடிநீர் சப்ளை ஏற்கனவே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×