என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலுதூக்கும் போட்டி"

    • பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வலுதூக்கும் போட்டி நடக்கிறது.
    • 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்

    கோவை,

    தமிழ்நாடு வலுதூக்கும் சங்கமும், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து தமிழ்நாடு அளவிலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவ- மாணவிகளுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளை கோவை அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நாளை (5-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் நடத்துகின்றன.

    தமிழகம் முழுவதும் இருந்து 54 கல்லூரிகள், 45 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் கல்லூரி, பள்ளிக்கு சாம்பியன் பட்டமும், மாணவ- மாணவிகளுக்கு பதக்கம், கே.பி.ஆர். வலுதூக்கும் சுழல் கேடயமும் வழங்கப்பட உள்ளது.

    இந்த தகவலை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.  

    • வேலூர் கலெக்டர் ஆபிசில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
    • வலுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தேன் பள்ளி அருந்ததியர் காலனியில் வீடு கட்டியது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.இதில் எங்கள் 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக நாட்டாண்மை அறிவித்தார். நாங்கள் ஊரில் தண்ணீர் எடுக்கக்கூடாது. தெருவில் நடக்க கூடாது. யாரிடம் பேசினாலும் அபராதம் விதிக்கப்படும். திருவிழாக்களில் அனுமதி இல்லை. எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு போனால் கேவலமாக பேசுகிறார்கள்.

    இது குறித்து மேல்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

    இது பற்றி தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்ட வேண்டும்.கொலை மிரட்டலில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர் ஜெயமாருதி என்பவர் கலந்து கொண்டு, 4 தங்கப்பதக்கங்களை பெற்றார். மேலும் சத்துவாச்சாரியை சேர்ந்த மாணவி கவிதா 6-ம் இடம் பிடித்தார். சாதனை படைத்த இருவரும் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனை மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் மாணவன் ஜெயமாருதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். மேலும் இருவரையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    குடியாத்தத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இன்று அவரது மனைவி ரேவதி என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை.குடும்பம் நடத்த வழி இல்லை. என் மனைவிக்கு ஏதாவது வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    இதனை கேட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நோயால் பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அவரது மனைவி ரேவதிக்கு குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தாராபட வேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் மழையின் காரணமாக எங்கள் பகுதிக்கு மாற்றப்பட்டது.தற்போது மீண்டும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தாராபடவேடுபகுதிக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை மாற்றக்கூடாது என கூறியுள்ளனர்.

      சேலம்:

      தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி, மே 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற்றது.

      இதில் சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீராங்கனையும், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியுமான உமா மகேஸ்வரி, சப்-ஜூனியர் 84 கிலோ எடை பிரிவில் ஒட்டுமொத்தமாக 315 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.

      இதே உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பிரியா 69 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், லாவண்யா 47 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பவதாரணி 47 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், ஜாஸ்மின் 52 கிலோ எடை பிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்று பெருமை சேர்த்தனர்.

      இவர்களுக்கான பாராட்டு விழா சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலை யத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் அசோகன், கவுன்சிலர் கோபால், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், உடற்ப யிற்சி நிலைய செயலாளர் பொன் சடையன், தலை வர் தெய்வப்பிள்ளை, ஐ.எல்.ஹெச்.டி கைத்தறி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், சேலம் மாவட்ட ஊரக குத்துச் சண்டை சங்க தலைவர் மருது பிள்ளை, சேலம் மாவட்ட கால்பந்து சங்க செயற்குழு உறுப்பி னர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

      மேலும் தமிழ்நாடு வலுத்தூக்கும் சங்க தலை வர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, செயலாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரும் வீராங்கனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

      ×