என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கணக்குகள் முடக்கம்"

    • மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.
    • அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது.

    அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.

    உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.

    எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.

    மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 1 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்தவகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த வங்கிக்கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மேற்படி வங்கிக்கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர்.

    அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர். அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக்கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 4½ லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

    இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும்.

    இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

    • திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தக்கலை, திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜோகன் (27), கேரளாபுரத்தை சேர்ந்த அபினேஷ் (30), அடப்பு விளையை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களது வங்கி கணக்கையும் முடக்கினார்கள்.

    கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜெயசேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
    • கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 20 பேரின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளது

    கோவை,

    தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது.

    இதனை மீறி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சூலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளது. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளது. விரைவில் வழக்குகள் முடிந்து தண்டனை கிடைக்கும் வகையில் போலீஸ்துறை செயல்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 20 பேரின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளது. தற்போது ஓரளவுக்கு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×