என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்-"

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகதண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட் சிகளிலும் முற்பகல் 1 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொ ருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவி னம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், பாரத் நெட் இணையதள வசதி உள்பட வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்.

    கிராம சபைக் கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாக கலந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.
    • நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும்

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் எர்ரபையன அள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பழ தோட்டத்தில் நடைபெற்றது.

    இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மா னங்களாக ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக புனரமைத்து அடுத்த ஆண்டிற்குள் மழை நீர் முழுவதையும் ஏரிகளில் தேக்கியும், புதிய நீர் நிலைகளை அமைத்தும், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும் பணிகளை முடிப்பதாகவும், அதன் மூலம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

    அது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 42 ஏக்கர் பரப்பள வில் அமைக்க பட்ட பழத்தோட்டத்தை தொடர் பராமரிப்பு மூலம் பலன் தரும் பத்தாயிரம் மரக்கன்று களையும் பராமரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.

    அதேபோல் எர்ர பையனஹள்ளி ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மை யான பசுமையான கிராம மாக மாற்றுவதே இலக்கு என்பதையும் பொதுமக்கள் ஆதரவுடன் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பழ தோட்டம் பகுதியில் புதிதாக சீரமைக்கபட்ட ஏரி கரை பகுதியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    மேலும் அக்கிராமத்தில் அம்ருத் மஹோத்சவ் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்ளி ட்டோருக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வழங்கினார்.

    இதில் ஊராட்சி துணைத் தலைவர் ரஞ்சித் குமார், செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சியை சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்கள் எர்ரபையனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த இளைஞ ர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தாண்டிக்குடி யில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி ஊராட்சி பட்டலங்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் தலைமை தாங்கி னார். கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினர்.

    தாண்டிக்குடி கிரா மத்தில் புதிதாக கனரா வங்கி கிளை மற்றும் இ-சேவை மையம் தொடங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். டவர், அமைக்க வேண்டும். காவல்துறை மற்றும் வருவாய் துறை, மருத்துவ த்துறை அலுவலர்களுக்கும் அரசு சார்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    தாண்டிக்குடி யில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக விவசாயிகளுக்காக அரசு வழங்கும் உதவிகளை முறையாக வழங்க வேண்டும்.

    மலைப்பகுதி களில் அரசு அனுமதி பெறாமல் இயங்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம், பொக்லைன் எந்திரங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும். போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் கிடக்கும் மரங்களை வனத்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் கணே ஷ்பாபு நன்றி கூறினார்.

    • நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.
    • நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    ஊட்டி:

    சுதந்திர தினவிழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.இக்கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    சுதந்திர தினத்தி னையொட்டி, நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.

    ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    இவா்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியத்துடன் பல்வேறு கடனுதவிகளும், வங்கிகள் மூலமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மேலும், மகளிா் திட்டத்துறையின் சாா்பில், மகளிா் தங்கள் வாழ்வாதாரத்தினை உயா்த்தி கொள்வதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ஏராளமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிா்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×